Flipkart

Amazon

Amazon

Sunday, February 8, 2015

சலுகை

https://twitter.com/Koothaadi/status/563979307324669954

https://twitter.com/lakschumi/status/564172264070189056

இந்த குறிப்பிட்ட ட்வீட் பற்றி நேற்று @shilphacharles ஓடு கடும் சண்டை. அவளது பாயிண்ட் 'இந்தச் சமூகம் இப்படி பெண்களை வைத்திருக்கிறது'
மிக validஆன பாயிண்ட். 70களில். இப்போதும் கூட படிக்க இயலாத கைக்குள்ளேயே வாழும் பெண்களுக்கு.

ஊருக்கு உபதேசம் செய்வதும், சொந்த வாழ்க்கையில் மண்ணாந்தையாய் வாழ்வதும் நம் கலாச்சாரம். இங்கே எத்தனை பேர் நியூமராலஜி லூசுத்தனம் என தெரிந்து தன் பிள்ளைகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி இருப்பார்கள்?

இந்த சின்ன ட்விட்டர் ஸ்பேசை sample space ஆக வைத்து பாருங்கள். 10% வருமான வரி வரம்புக்குள் வரும் திருமணமாகாத பெண்களை typical நம் சமூக பெண்கள் எனக்கொள்வோம். இதில் எத்தனை பேர் நான் சொன்ன மாப்பிள்ளைகளை திருமணசந்தையில் பெற்றோர் வாங்கித்தர காத்திருக்கிறார்கள்?

திருமணமான எத்தனை பெண்கள் சந்தைக்கு போகாமல் தானாய் தன் கணவனை தேர்ந்தெடுத்தார்கள்? இவர்களெல்லாம் இந்த சமூகம் தரும் அடையாளத்தை, சலுகைகளை, பாதுகாப்பை வாங்கிக்கொண்டு அடமானமாய் தன் உரிமைகளை வைக்கிறார்கள். Emotional blackmail, caste, relatives - and related perks இதையெல்லாம் பெற்றுக்கொண்டு உரிமை அடகு வைக்கும் போது அதற்கெதிராய் பேச மட்டும் செய்தால் அது அயோக்கியத்தனமில்லையா?

ஆண்கள் - ? அவர்கள் சதவீத அளவில் கொஞ்சம் மேல். சந்தைக்கு போகாமலிருப்பவர்கள், பெண்களைவிட சற்றே அதிகம். ஆனால் மீதமிருப்பவர்கள் - சந்தைக்காரர்களுக்கு அதோடு ஜாதிப்பற்றும், ஆணாதிக்கமும் இருக்கும். - சந்தைக்கு செல்லும் பெண்டிருக்கு இதுகள் தான் வாய்க்கும். and they deserve it.


Thursday, November 6, 2014

ஜில் கதைகள் - 6

‪‪#‎ஜில்‬ ‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎JillStories‬ ‪#‎Jill‬

https://www.facebook.com/SHAN4Luv/posts/885759614770590

இன்றைக்கென பார்த்து ஜில் வரும் நேரமாய் அலுவலக ஸ்மோக் ப்ளேஸில் சிகரெட்டும் கையுமாய் நின்றிருந்தேன். நின்றிருந்தேனே அன்றி புகைக்கவில்லை. நண்பன் ஒருவனுக்கு பேச்சுத்துணைக்கு வந்து ப்ளாக் நல்லாருக்கும் மச்சான், அடியேன் என்றவன் ஆசை காட்ட அப்போது என் விரலிடுக்கில் அது இடம்பிடித்திருந்தது.
உதடுகளை நோக்கி கையை செலுத்திக்கொண்டே நிமிரும் போது தொலைவில் அவள் வந்துகொண்டிருப்பதை கவனித்து விட்டேன். என்னை முறைத்துப் பார்த்தபடி வேகவேகமாய் எட்டி நடந்துகொண்டிருந்தாள்.
"போடாங்க" என அவனை சபித்துக்கொண்டே, சிகரெட்டை அவன் கையில் திணித்து விட்டு, சடாலென முன் வாசல் முன் ஜில்லோடு இணைந்து நடக்க தொடங்கினேன். அவள் பேசவேயில்லை. ஆனாலும், கூட நடப்பதையும் தடுக்கவில்லை.

"ஜில்லு"

"..."

"ஜில்ல்ல்லு"

"என்ன?" நின்று முறைத்து, புருவங்களை நெறித்து கேட்டாள்.

வெறுமனே பார்த்துக்கொண்டே நின்றேன். பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ட்ரஸ் ஒன்று, ஆண்களுக்கான ஜாக்கி பனியன் ஸ்லீவ்லெஸ் வரும், ட்ராக்கில் போட, அதையே ட்ரான்ஸ்பரண்ட் க்ளாத் ஐந்தை ஒன்றாக சேர்த்து தைத்தால் எப்படி இருக்கும், அது தான். பெயர் தெரியவில்லை. இல்லை. சொன்னாள். மறந்துவிட்டது. கீழே ஒரு பார்மர் ஸ்கர்ட். மிகச்சரியாய் முட்டியோடு நின்றிருந்தது.

"ப்ளாக் ஸ்கர்ட்டு.. உள்ள பிங்க் தானே"

"You'll never know, you asshole"

வெடுவெடுவென இருப்பதாய் சொல்வார்களே, தப்பு, எழுதுவார்களே, அப்படி இருக்கும் அவள் கால்கள். அதிலிருந்து மேலே நோக்கினால், என்பதுகளில் வார இதழ்களுக்கு வரைபவர்கள் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வடிவம் வைத்திருப்பார்களே, பெண்களின் கழுத்துக்கு கீழ். ஸ்க்வையர் லெக் பவுண்டரியின் உள்புறம் போன்ற இடை. ஹூம் என சூடான மூச்சோன்றை வெளிப்படுத்தியபடியே நிமிர்ந்து முறைத்தேன்.

"என்ன இது ஹீல்ஸ்"

".." பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

"கேக்குறேன்ல"

"நான் சொன்ன எதையும் கேட்க மாட்ட.. Why the fuck should I care about what you say?"

தோளை பிடித்து நிறுத்தி, திருப்பி,

"சத்தியமா அடிக்கல செல்லம். அடிச்சிருப்பேன். அதுக்குள்ள நீ வந்துட்ட"

"ம்ம்க்கும்..அதெல்லாம் உனக்கா இருக்கணும் நான் சொல்லி.."

"சரி, நார்மல் ஆவு. விட்டுடுறேன் சொன்னேன்ல. ஜனவரி 1. பொறு."

"ம்ம்ம்"

                     லிப்ட்டுக்குள் நுழைந்தோம்.இந்த நேரத்தில் காலியான லிப்ட் கிடைப்பதெல்லாம் மோடி இஸ்லாமியராய் மாறுவதைப் போன்றது. ஆனாலும் அன்று மாறிவிட்டிருந்தார். மன்னிக்கவும். லிப்ட் காலியாய் இருந்தது. வலது தோளால் அவளது தோளில் இடித்து லிப்ட்டினுள் தள்ளினேன்.

                        லிப்ட்டின் டோண்ட் ஓப்பன் பட்டனை அழுத்தியபடி அவளை சட்டென என்னோடு சேர்த்தி அழுத்தினேன். எனது இன்னொரு கை அவளை மொத்தமாய் வளைத்துப்பிடிக்க போதுமானதாய் இருந்தது. ஒரு மைக்ரோ வினாடி அந்த ஸ்பரிசத்தை ரசித்தவள், சிரித்துக்கொண்டே "You, Asshole" என்று என்னை தள்ளிவிட்டாள். கொஞ்சம் கையெடுத்து விலக, மூன்றாவது ப்ளோரில் லிப்ட் திறந்து இன்னொரு ஜோடி நுழைந்தது. ஒரே சட்டைக்குள் இருப்பதை போல ஈஷிக்கொண்டே நுழைந்தவர்கள் எங்களை பார்த்ததும் சிறிது விலகி வந்தனர்.

                        அதுவரை காதல் ரசம் சொட்டியிருந்த அவள் முகம் சட்டென ஏதோ மொக்கை ஆங்கில பட பேய்காட்சியில் டூப் போடுபவன் போல் ஆனது.

"I said wear a dhuppatta whenever you wear a chudi, why can't you listen?"

                      ஜில் லேசாய் சிரித்துக்கொண்டாள். என்னோடு பழகிய ஆரம்ப கட்டங்களில் ஜில்லுக்கு சவுத் இந்தியன்ஸ் என்றால் ஆகாது. ஏகப்பட்ட ஸ்டீரியோ-டைப்புகள். இங்க வெறும் ஸ்லீவ்லெஸ்யே ஏதோ பேன்ட்டிய பாக்குற மாதிரி பாக்குறாங்க என்பாள். சிரித்துக்கொண்டே, சதவீதம் கம்மியாய் இருக்கலாம், ஆனால் இது இந்தியர்கள் பொதுக்குணம் என்பேன். நீ இருந்தது பெரிய மெட்ரோ அதனால் தெரியாது என்பேன். இப்போது ஒத்துக்கொள்வாள் என நினைக்கிறேன். ஜில்லை முதல் முறை ஊருக்கு அழைத்து சென்ற போது, ஜன்னலுக்குள் இருந்து எங்களை பார்த்து குசுகுசுத்த பெண்களை வைத்து அவள் இன்றும் தமிழகத்தை ஓட்டுவது வழக்கம்.

                "என்ன இப்படி எல்லாம் கேட்கக்கூடாது" என்று காதலிக்க ஆரம்பித்த தொடக்கத்தில் கேட்ட அவள் பின்பு இதெல்லாம் என்ன கேட்க மாட்டியா என்று கேட்ட ஆரம்பிந்திருந்தாள் இப்போதெல்லாம். பெண்களுக்கு சுதந்திரம் திடீரென கிடைத்தால், "இத வெச்சுகிட்டு ஒரு ஹேண்ட் பேக் குடுங்க" என வாங்கி வந்துவிடுவார்கள் என்பேன் அவளிடம். இதெல்லாம் சிலர் கேக்கணும் டா. சிலர் அதிகாரம் பண்ணனும். ஆனா, நான் முடியாதும்பேன் நீ கேட்டுக்கணும் என கருப்பு வெள்ளை பூக்கள் மின்ன சிரிப்ப்பாள்.

             அவர்கள் விவாதம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது. "அடேய் மாபாவி, க்ராதகா, ஒரே ஒரு முத்தம் குடுக்க உடுடா என்ன" என என் மனம் அவனை சபித்துக்கொண்டிருந்தது. இவன் இறங்க மாட்டான், சண்டைல பிசியா இருக்கறப்ப சட்டுன்னு ஒண்ணு குடுத்திடுவோம்ன்னு , ஜில்லை தாண்டி இருக்கும் பட்டனை அழுத்துவது போல ஜில்லை புறங்கழுத்தில்
முத்தமிட்டேன்.

அவர்கள் பேச்சை நிறுத்தி திரும்பினார்கள்.

"What are trying to do"

"Press 13th"

"There is no 13th in this building"

Tuesday, October 28, 2014

ஜில் கதைகள் - 5


தீபாவளிக்கு முந்தைய நாள் அனைவரையும் கலாச்சார உடை அணிந்து வரச்சொன்னபோதே சிறு மூளையில் ஒரு எல்.ஈ.டி மினுக்கத் தொடங்கி விட்டது. ஜில்லு புடவை கட்டும் ஸ்டைலை நினைத்துப் பார்த்தாலே, குண்டலினியானது விளக்கொன்று தலைகீழ் எரிந்தாற் போல், கீழ் நோக்கிப்பாயும்.
அடுத்த நாளில் இருந்து லீவ் போட்டிருந்ததால் முதுகுத்தோல் உரியுமளவு வேலை. மதியமே முடித்துவிட்டு கிளம்புவதாய் ப்ளான். வந்த போதே பதினொன்றரை இருக்கும். காலியாய் கிடந்த லிப்ட்டில் ஏறி பதினொன்றை அழுத்தி விட்டு, அசுவாரசியமாய் முத்தமிட்டுக்கொண்டிருந்த அலுமினியக்கதவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பண்டிகை காலமென்பதால் ஆபீஸே காலி. இல்லையென்றால் இந்த நேரத்துக்கெல்லாம், மல்லிகையை மூக்கினுள் வைத்து வாசம் காட்டுவார்கள். திருவிழாக்கூட்டமிருக்கும். முதல் தளத்தில் யாரோ நிறுத்தியிருந்தார்கள். கதவு விலகியடவுடன் ஏசி விரைத்த தரையை பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன். அதை உடைத்துக்கொண்டு அப்சரஸின் கால்கள் லிப்டினுள் மிதந்தன. நான் கண்ணை மேலே நிமிர்த்தவே இல்லை. கடவுளின் காலை காண உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ... நிமிர்ந்து முகமிருக்கிறதா எனப் பார்க்க எனக்கு தோன்றவில்லை.
ஜில் என் மோவாயை நிமிர்த்தினாள்.
"என்ன டா ஆச்சு உன் போனுக்கு?"
"தொலைஞ்சுடுச்சு"
அவள் மார்புக் கச்சை மீது வெறித்திருந்த விழிகளில் மொத்த கவனமும் இருக்க, வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது.
"நாயே நிமிர்ந்து தொல டா, யாராச்சும் வந்து தொலைய போறாங்க"
Irresistible என்ற வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் புரியாவிடில் அன்று என் நிலையை விளக்க என்னால் வேறு வார்த்தைகளே தேட முடியாது. வெளிர் நீல நிறத்தில் பட்டுப்புடவை. இடப்பக்கத்தில் இருந்து பார்த்தால் விடைத்து நிற்கும் முயல்குட்டிகளுக்கு கீழே ஸ்கீயிங்க், பனிச்சறுக்கு சாகசம் நடக்கும் க்ளிஃப். குழந்தையின் மேலுதடு போல இருக்கும் அவள் காது மடல்களில் தொங்கும் நீல நிற ஜிமிக்கி. She is goddess of beauty, I say. அலுவலகமாய் இல்லாதிருந்தால், இனி லட்சோபலட்சம் ஆண்டுகளுக்கு கவிஞர்கள் உவமையாய் எடுத்தாளும் ஒரு மகத்தான காதல், கலவி சித்தித்திருக்கும். சிவனும் சக்தியும் புணர்ந்த போது அண்டம் அதிர்வதாய் ஊர்ப்பக்கம் வாய்ப்பாட்டு உண்டு. அதை மாற்றக்கிடைத்த ஒரு வாய்ப்பை வீண்டித்த கோபத்தில் லிப்ட்டை ஓங்கி உதைத்தேன்.
"என்னாச்சு?" பதற்றம் துளியுமில்லாத செக்ஸியான குரலில் வினவினாள் ஜில் (அல்லது எனக்கப்படி தோன்றியதா?)
ஒரே வினாடி. பார்வைகள் சந்தித்து மீண்டன. இரண்டு கோள்கள் மோதியது போல. ப்ளாக் ஹோல் என்பதை நாமெல்லாம் கற்பனையில் செய்து பார்த்திருப்போமே, அதன் உச்ச நொடியைப்போல.
அனிச்சையாய் நெருங்கி இருவரும் முத்தமிட ஆரம்பித்தோம். பெரு-நெருப்பென ஆக்ரோஷமாய் தொடங்கி, இடுப்பில் புரண்டு கொண்டிருந்த விரல்களில் வியர்வை பட்டவுடன் மெல்ல குழந்தையின் முகர்தல் போல மாறி தொடர்ந்தது. வைனில் ஊறவைத்த ஸ்ட்ராபெர்ரியை போல இருந்தன அவள் உதடுகள். ஸ்ட்ராபெர்ரி மார்கிரிட்டா மாக்டெய்லின் சுவை. முத்தம் முடிந்த பிறகும், பெருமூச்சு கழுத்தில் பட உடல் உரச வியர்வை பெருக்கெடுக்க நின்றிருந்தோம்.
மூச்சின் நெடி வியர்வை கலந்து வெப்பமாய் கழுத்தறுகே ஊர்ந்தது. நெடிய பாறை மீதெரும் வெய்யில் போல நேரம் மெல்லமாய் கரைந்து கொண்டிருந்தது.
பதிமொன்றாம் மாடி.
பிரிந்ததிருந்த அலுமினியக்கதவுகளின் ஊடாக ஒரு உருவம் உள்ளே
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றபடி நுழைந்தது.
ஒரு கணம் என்னை கண்டு திடுக்கிட்டு, "What are you staring at?" என்றவனை பார்த்து விஷமமாய் புன்னகைத்தபடியே வெளியேறினேன். ஜில் பத்தாவது ப்ளோரில் வேலை செய்கிறாள் 

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.