Flipkart

Amazon

Amazon

Saturday, June 4, 2011

பாபா ராம்தேவ்வும் பரதேசி!

பாபா ராம்தேவ், இவனை பற்றி பதிவு போடாதே பக்கவாதம் வரும் என பயமுறுத்தும் சிலரும் இதே இணையத்தில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

              யாரிவன் இத்தனை நாள் இவனுக்கு இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்ததது.அன்னா ஹாசாரே தான் இதன் காரணம். நீங்கள் ஒரு விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும். இந்தியாவில் பல பேர் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நமக்கு தெரியா விட்டாலும் உண்மை அது தான். இவ்வளவு பேர் இருக்கு, அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவு குவிய என்ன காரணம்?


                           விடை மிக எளிது.மற்ற எல்லோருடைய போராட்டங்களிலும் சிறிதாவது சுய நலம் வெளிப்படையாகவே இருக்கும். உதாரணத்திற்கு நம் குழாயடில் தண்ணீர் வரவில்லை என்றோ, நம் உற்வினரை லாக்கப்-டெத் என்றோ தான் போராடிக் கொண்டு இருப்போம்.இந்த போராட்டங்கள் தற்போதைய கார்ப்பரேட் செய்தி சேனல்கள் அல்லது பத்திரிக்கைகளில் வர இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று நாம்  ஃபேமஸ் ஆக இருக்க வேண்டும் அல்லது நாம் யாரை எதிர்க்கிறோமோ அவராவது அப்படி இருக்க வேண்டும்.(உதாரணம் : நம்ம வனிதா)

                          அன்னா ஹசாரேவுக்கு லோக்பால் மூலம் கிடைக்க போவது ஒன்றும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை,தன் கிராமத்தை சமூக சேவை மூலம் மாதிரி கிராமமாக மாற்றியவர் , ராணுவத்தில் வேலை பார்த்தவர் போன்றவை தான் அவரை கார்ப்பரேட் செய்தி நிறுவனகங்கள் தேர்ந்தேடுக்க காரணம்! இவரை பற்றி கருத்து வேறுபாடுகள் அதிகமாய் எழ வாய்ப்பு இல்லை. இந்த தாடி வெச்ச பெருச்சாளி இந்த நேரத்துல தான் உள்ள நுழஞ்சான். நல்ல வாயன் சம்பாதிச்சு நாற வாயன் தின்ன கதையா, அன்னா பண்ண  உண்ணாவிரத்தத்த சார் பலன அனுபவிச்சாரு. இங்கே நம்ம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சாமியாருங்களோட ப்ளஸ்ஸே பேரு தான். பேரு கெட்டு போச்சுன்னா எல்லாம் போச்சு! இவனுங்க சாய்பாபா முதல் இந்த பனங்கொட்ட தலையன் ராம்தேவ் வரை எல்லோரும் சமூக சேவை முகமூடிய போட்டுக்கறது அதுக்குத்தான். பல சாமியாருங்க பெருகிக்கிட்ட போட்டி கார்ப்பரேட் யுகத்துக்ல இவனுங்க பப்பு வேகனும்ன்னா நான் இந்த சமூகத்தை தாங்குறேன்ன்னு ஒரு இமேஜ் உருவாக்கனும் ( நான் ஈஷாவை இந்த பட்டியலில் சேர்க்க மாட்டேன், அதன் மேல் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் புகழுக்காக சேவை செய்வது இல்லை).

 சாய்பாபா குடி நீர் திட்டத்துக்கு கொடுத்த காசும் இதே ரகம் தான். சரி அதை விடுங்கள். இந்த டாக் என்ன பண்ணுச்சுன்னா, யோகா பண்ணப்போறேன்ன்னு சொல்லி இடம் வாங்குச்சு.அப்பறம் இந்த சீசன்ல யோக பண்ண கூட்டம் வராதுன்னு சொல்லி உண்ணாவிரத்தத ஆரம்பிச்சுருச்சு. சுற்றி ஏர்கூலர்கள், 5000 மின்விசிறிகள் என வருபர்களுக்கு வசதிகள் வேறு! அப்ப சாகும் வரை உண்ணவிரம்ன்னு சொன்னது சும்மாவா?சாகப்போகிறவர்களுக்கு இத்தனை வசதிகள் எதற்கு. உண்ணாவிரத பந்தலில் 750 குடி நீர் குழாய்கள் எதற்கு.இந்த ஊடகங்கள் என்றாவது இவனுக்கு எதிரான கருத்துக்களை போடுமா என்று உற்று நோக்குங்கள். நிச்ச்யம் இல்லை.


                                   தன்னபிக்கை இல்லாத மனிதன் பிடித்து தொங்கும் கயிறு தான் கடவுள், கீழே இருக்கும் நாய்க்கு(பிரச்சனைக்கு) பயந்து அவன் அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறான். சிறிது நேரத்தில் நாய் பொறுமை இழந்து அங்கே இருந்து சென்றவுடன் அதற்கு கயிறு தான் காரணம் என்றும் மகிழ்ச்கி கொள்கிறான். இது ஓஷோ சொன்னது. இந்த காவி கபோதிகள் மக்களை வசியப்படுத்த எடுத்த ஆயுதம் தான் இந்த சூமுக சேவை மூகமூடி. ஐரோம் ஷர்மிள் மணிப்பூரில் சிறப்பு காவல் உரியமையை ரத்து செய்யக்கோரி, பெண்களை துனை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்ககோரி 10 வருஷமாக உண்ணாவிரதம் இருக்கிறாரே அவருக்கு ஏன் இந்த நாய் ஆதரவு தரவில்லை.
கருப்பு பணம் பற்றி ஏன் இந்த தீடீர் அக்கறை?


                            இவனுக்கு நிச்சயம் காங்கிரஸ் அடி பணியாது.இவன் நேற்று திருட வந்தவன் பரம்பரை பரம்பரையாக 150 வருடங்களாக திருடிகொண்டு இருப்பவனுக்கு இவனை சமாளிக்க தெரியாதா??

இவன் மட்டும் இந்த உண்ணாவிரத்தில் செத்து விட்டால் நான் இனி பதிவுகள் எழுதுவதையே விட்டுவிடுகிறேன்!