Flipkart

Amazon

Amazon

Wednesday, May 23, 2012

Twitter ~ ட்விட்டர் என்னும் மாய உலகம்


இந்த ட்விட்டர் ஒன்றும் மாய உலகமல்ல! 140 எழுத்துக்களுக்குள் உங்கள்

கருத்தக்களை அடக்கும் வித்தையை கற்றால் இந்த களிற்றை எளிதில்

வசப்படுத்தி விடலாம்.

ஏ.ஆர்  ரஹ்மான் பாட்டு கூட முதல் தடவை கேட்கும் போது பிடிக்காது. எனவே

 ரெண்டே நாள்ல அக்கெளன்ட்ட டீ ஆக்டிவேட் பண்ணீறாதீங்க. பழக பழக

ட்விட்டர் இனிக்கும்.

ட்விட்டருக்கு வரும் புதியவர்கள் (தமிழ் ட்வீட்ஸ் படிக்க விரும்புபவர்கள்) கடைபிடிக்க வேண்டிய சில ரூல்ஸ், அடிப்படை ட்விட்டர் விதிகள் மற்றும் சில விளக்கங்கள் :

டைம் லைன் (Time line) : இது தான் உங்கள் ட்விட்டர் ஹோம் பேஜ். இதில் நீங்கள் தொடரும் நபர்கள் அனைவரின் கீச்சுக்களும் நேரவாரியாக இடம் பெறும் (லேட்டஸ்ட் பர்ஸ்ட்)

பாலோயிங்க் (Following) : நீங்கள் தொடருபவர்கள் , இவர்களின் கீச்சுகள் தான் உங்கள் டி.எல் (அதாவது டைம் லைனில்) இடம் பெறும்.

பாலோயர்ஸ் (Followers) : இவர்கள் உங்களை தொடருபவர்கள்.

லிஸ்ட் (List) : பல பேர் உபயோகப்படுத்தாத வசதி இது. இது கூகுள் ப்ளஸ்ஸில் வரும் லிஸ்ட் போலத்தான் அதாவது. நீங்கள் ஒரு 1000 பேரை பாலோ செய்வதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு 10 பேர் ஒரு வகையான நகைச்சுவை ட்வீட் செய்பவர்கள், ஒரு 30 பேர் சச்சின் போன்ற பிரபலங்கள் என்றால் நீங்கள் இவர்களை உங்கள் லிஸ்ட்டின் மூலம் வகை படுத்தி வைக்கலாம்.  இதன் இன்னொரு முக்கியமான வசதி, ஒரு வேளை நீங்கள் ஒரு குறிபிட்ட லிஸ்ட்டை மட்டும் உங்கள் டி எல் ஆக பார்க்க விரும்பினால் அதையும் செய்யலாம்.

@கனெக்ட் : நீங்கள் ஒருவரின் கீச்சுக்கு பதில் அனுப்ப விரும்பினால் அவரது ஹேண்டில் (@ க்கு பின்னால் வருவது ஹேண்டில் இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் www.twitter.com/koothaadi யில் @koothaadi என்பது ஹேண்டில் SHAN – கூத்தாடி என்பது பெயர் ) போட்டு அனுப்பலாம் , இதை எல்லோரும் பார்க்க முடியும். இதற்கு பெயர் தான் மென்ஷன்! (குறிப்பிடுதல்)

ரீ ட்வீட் (மறு கீச்சு) : நீங்கள் பாலோ செய்யும் நபர் செய்யும் ஒரு கீச்சு உங்களை மிகம் கவ்ர்ந்தால் அது உண்மையாகவே பிறரை சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரீட்வீட் செய்யுங்கள். இது உங்களை தொடர்பவர்களை சென்று அடையும்.

ஃபேவரிட் : நீங்கள் என்றாவது மீண்டும் பார்க்க விரும்பும் கீச்சுக்களை ஃபேவரிட் செய்து கொள்ளலாம் இது புக் மார்க் போன்றது.

# டேக் : இது தேடுதலை எளிமையாக்க அறிமுகபடுத்தப்பட்ட்து. இந்த # ஐ அடுத்து வரும் வார்த்தை குறித்து தேட இதை கிளிக்கினால் போதும் . இது தமிழ் போன்ற பிற மொழிகளுக்கு பொருந்தாது எனினும் வாட்ச் இல்லாத போதும் இடது கையை பார்க்கும்  பழக்கம் போல தொற்றிக்கொண்டு விட்டது.

Block வசதி : உங்களை ஒருவர் தொல்லை படுத்தினால் அவரை உங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்க இது.

செக்கீயூரிட்டி : சிலரது கீச்சுக்கு அருகில் ஒரு பூட்டு சிம்பள் வரும். அதாவது இவர்களை தொடர வேண்டும் எனில் கிட்ட்த்தட்ட பிரண்ட் ரிக்வெஸ்ட் போல இவர்களது அனுமதி பெறுதல் அவசியம். என்னை பொறுத்த வரை புதிய ட்விட்டர்கள் தங்கள் கீச்சுகளுக்கு பூட்டுப்போடுதல் நன்றன்று!

வெரிபைடு சிம்பள் : இது உண்மையான அக்கெளண்ட் என்பதை குறிக்கும் , பிரபலமானவர்களுக்கு வழங்கப்படும்.( https://support.twitter.com/groups/31-twitter-basics/topics/111-features/articles/119135-about-verified-accounts )

டைரக்ட்டு மெசேஜ் (Direct Message or DM) : இது சேட்(Chat) போல

1 ட்விட்டருக்கும் பேஸ்புக்குக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் , Follow எனப்படும் தொடருதல் வசதியாகும். இது கிட்டதிட்ட, முக நூலில் உள்ள சப்ஸ்கிரைப் போன்றது.

2. ஒருவர் உங்களை தொடர்ந்தால் நீங்கள் போடும் அனைத்து ட்வீட்டுகளும் (கீச்சுகளும்) அவரது டைன்லைனில் வரும் என்பதை நினைவு வெய்யுங்கள்

3. நீங்கள் தமிழில் கீச்ச விரும்பினால் அழகி போன்ற எதேனும் ஒரு ட்ரான்ஸ்லிற்ரேஷன் மென்பொரும் உங்களுக்கு உபயோகப்படும்.

4. புதிதாய் தமிழ் ட்விட்டர் உலகிற்கு வருபவர்கள் வார இதழ் வாசற்படி மூலமாகவே பெரும்பாலும் வருகிறார்கள்.

5. நீங்கள் விரும்பினால் நட்பை உருவாக்கிகொள்ளுங்கள் ஆனால் அந்தரங்க விஷயங்களை அவசரப்பட்ட்டு வெளியிட வேண்டாம்.

6. ஒருவரது கீச்சுக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ரீட்வீட் செய்யுங்கள். ஆள் யாராய் இருந்தாலும் பரவாயில்லை.

7. நீங்கள் பின் தொடரதா நபரின் ப்ரோபலை நீங்கள் கடக்க நேர்ந்து அது உங்களுக்கு பிடித்து இருந்தால் அதை பின் தொடருங்கள் . அவர் உங்களை தொடர்கிறாரா இல்லையா என்ற குறுகிய எண்ணம் வேண்டாம்.

8 உங்களை புதிதாய் ஒருவர் பின் தொடர்ந்தால் அவருக்கு ஒரு நன்றி கூறுங்கள் . அவர் ப்ரோபைல் உங்களை கவர்ந்தால் அவரை பின் தொடருங்கள்.

Hi this user is making nasty things about you... போன்ற மெசேஜ்ஜுகள் எதாவது கண்டால் கிளிக்க வேண்டாம் அது ஸ்பாம், உங்கள் அக்கவுண்ட்டை ஹாக் செய்ய செய்த வித்தை!

  முக்கியமான கடைசி பாய்ன்ட் , யாராவது கீச்சுவது உங்கள் நம்பிக்கைக்கு, கருத்துக்கு எதிராக இருந்தால் , கருத்தை எதிர்த்து கீச்சுங்கள் , அதை சொல்பவரை எதிர்க்காதீர்கள். ஆரோக்கியமான விவாதம் தான் நமது மன்மோகன் சிங் போன்ற மே(பே)தை ஆளும் ஜனநாயகத்துக்கு பெருமை!

Tuesday, May 1, 2012

பைத்தியகாரர்களுக்கு மட்டும்!


              விடியற்காலை மூன்று மணிக்கு என்றாவது எழுந்ததுண்டா? தூக்கமில்லாத பின்னிரவுகளை அனுபவத்ததுண்டா. நிச்சயம் ஆம் என்பீர்கள்? எல்லோருக்கும் ஒரு உறக்கம் இல்லாத இரவின் நினைவு நிச்சயம் இருக்கும். காய்ச்சல் அடிக்கும் போது, புதிதாய் அடித்த துளியூண்டு சரக்கு வயிற்றை பிசையும் போது, காதலி பிரியும் போது , மேனேஜர் பதவி உயர்வு பெறும் போது இப்படி பல முறை எவ்வளவு தேடினாலும் தூக்கம் தவிர எல்லாம் கிடைக்கும். அந்த நிமிடங்களை ஆழ்ந்து அலசினீர்கள் என்றால் அதில் வரும் கனவுகளை உணரலாம் (காய்ச்சல் அடிக்கும் போது இதை உணர்வது எளிது,இரவில் மட்டும் தான் பகலில் சிரமம்). சமீபத்திய ஒரு இரவில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு ரசமான கனவின் தொகுப்பு இது. இந்த வார்த்தைகளில் கோர்வையோ தர்க்கமோ எதிர்பாத்து படிக்க வந்திருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விட்டு திரும்பி விடவும். இது தர்க்கத்தை தாண்டிய ஒரு பதிவு. இது குழந்தைகள் அல்லது பைத்தியக்கார்ர்களுக்கானது. நீங்கள் இரண்டுமில்லை என்றால் (மேதாவியாகவே இருப்பினும் திரும்பிவிடவும்)

           ஒரு மைதானத்தில் தனியாக நின்று கொண்டு இருக்கிறேன். திடீரென யாரோ எங்கிருந்தோ ஓலமிடும் ஓசை கேட்கிறது. மைதானம் குளிர் பிரதேசமாக மாறி இருக்கிறது. சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்கிறேன். எங்கிருந்தோ ஓநாய்கள் பூட்டப்பட்ட ஒரு வண்டி வருகிறது. அதில் அமர்ந்திருப்பவனை என்னால் அடையாளம் காண முடியாவிட்டாலும் நிச்சயம் அவனை எனக்கு தெரியும் என்ற உணர்வு மேலிடுகிறது. அவன் என் அருகில் வண்டியை நிறுத்துகிறான். இப்போது ஓநாய்கள் எழுந்து நிற்கின்றன இடம் நிறம் மாறுகிறது. இப்போது எங்கு இருக்கிறேன் என தெரியவில்லை, இந்த இடம் நெரிசல் மிகுந்த சாலை போல் இருக்கிறது. எல்லோரும் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்கள். எல்லோரும் பரபரப்பாக எதையோ செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு குழந்தை அழும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. எங்கிருந்தோ ஒரு பெரிய வாகனம் வருவது தெரிந்து. அந்த வாகனத்தின் முகப்பில் ஒரு பூவின் படம் வரையப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் வெள்ளை ஓளி பரவ ஆரம்பித்தது. அந்த வாகனம் என்னை நோக்கி வந்தது. அது என்ன காரணத்தாலோ ஒரு நிமிடத்தில் கரைந்து போனது. ஒரு பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டு இரண்டு பேர் மட்டும் நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். அந்த பிணத்தின் மீது வீசப்பட்ட பூக்கள் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அந்த பாடையில் படுத்திருந்த பெண் திடீரென எழுந்து ஓலமிடத்தொடங்கினாள். அவள் கதறலை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவள் மார்பில் அடித்துக்கொண்டு கதறினாள். அவள் கதறல் ஓசையை கேட்க முடியாமல் காதை பிடித்துக்கொண்டு கண்களை இருக்க மூடிக்கொண்டேன்!




            கண்ணை திறந்த போது காது நரம்புகளின் பின் பொறுக்க முடியாத வலி இருந்தது. என்னை சுற்றிலும் மருந்துகளின் வாசனை அடித்தது. அந்த வெள்ளை அறை முழுவதும் ரத்தம் திட்டுதிட்டாய் உரைந்து இருந்தது. யாரோ ஒருவன் அங்கே சுவற்றின் மூலையில் அமர்ந்து என்னை சைகையில் எதோ செய்யுமாறு கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் எதற்க்காகவோ என்னை எச்சரிக்கிறான் என்றூ புரிந்தது. சட்டென சுற்றிலிம் இருள் கவிந்தது, தூரத்தில் வரும் ஒரு ரயிலின் ஓசை அந்த நிசப்த்த்தை பிளந்து துல்லியமாக கேட்டது. அந்த ஓசை மெதுவாக அருகே வருவது போல தோன்றியது. ஒரு தண்டவாளம் தெரிந்தது. இப்போது ரயில் மறைந்து அதில் ஒரு பெண் தெரிந்தாள். எங்கேயோ நீண்ட நாள் பார்த்து பழகியது போல ஒரு முகம், ஆனால் பெயரோ முகமோ இப்போது நினைவில் இல்லை. அவள் அழைக்க எண்ணி வாயை திறந்தேன் நாக்கு உலர்ந்துவிட்டு இருந்தது. தொண்டையில் ஆரம்பித்து காது முடிய ஒரு நரம்பு பிய்த்து எடுத்தது போல் வலித்தது. மீண்டும் ஒரு வெளிச்சம் யாரோப்போட்ட ஒரு பெரிய கோலத்தின் மத்தியில் நின்று கொண்டு இருந்தேன். சொட்டுச்சொட்டாக அந்த கோலத்தின் மத்தியில் ரத்தம் விழுந்தது. ரத்த்த்துளிகள் பின் பெரிதாய் விழுந்து என்னையும் நனைத்தது. பின் நீட்வீழ்ச்சி போல விழுந்தது. பின் அந்தத் துளிகள் நின்றது. நான் சுத்தமாக நனையவில்லை. என்னை சுற்றிலும் வெப்பம் அதிகரிப்பது போல் உணர்ந்தேன். தோழி ஒருத்திக்கென நான் வைத்திருந்த ஒரு காலர் ட்யூன் ஒலித்தது. பின் அவளது பரிச்சயமான குரல் கேட்டது. இப்போது சுற்றிலும் இருட்டை தவிர எதும் இல்லை. எதேதோ வார்த்தைகள் ஒளிப்பிழம்பாய் தோன்றின.



            பைத்தியக்காரன் சுவர் ஓவியம், இலை, விட்டில் பூச்சி, மது , காதல் , இரக்கம் ,வியர்வை , அரிசி , மண் , பச்சை , காற்று , காயம் , நீர் , க்ரந்தம் , வார்த்தை , ஓசை , வெளிச்சம் , இன்பம் , வெறுமை என எண்ண முடியாத வார்த்தைகள் என்னை சுற்றித்தோன்றி மறைந்தன. திடுக்கிட்டு விழித்தேன் . வியர்வை வழிந்து கொண்டு இருந்தது. உடம்பு கொதிப்பது வியர்வையை வழிக்கும் போது தெரிந்தது. தலை விண்னெண்று வலித்தது. என் மொபைலை எடுத்து மணி பார்த்தேன். 2:20 AM.
இங்கே அனைவருக்குள்ளும் பல கேள்விகள் பைய்தியகாரத்தனத்தோடு உயிர்ப்போடு தான் உள்ளது. பாதை ஓரத்தில் ஒரு பித்தனை கண்டு  நாம் விலகி ஓடுவது அவன் மீது இருக்கும் பயத்தினால் அல்ல, ஒவ்வொரு இழவு வீட்டிலும் நாம் அழுவது இறந்தவர் பற்றிய நினைப்பினால் மட்டும் அல்ல, தனியாக உறங்க வேண்டிய மின்சாரம் அற்ற இரவுகளில் உறக்கம் தொலைப்பது நாம் மட்டுமல்ல.  
          நான் முன்னரே சொன்னது போல இந்த பதிவு பைத்தியகார்களுக்கானது. மேதாவிகள் இது வரை படித்திருந்தால் நான் பொறுப்பல்ல.