Flipkart

Amazon

Amazon

Saturday, February 23, 2013

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி

 இது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :)
                           டிஸ்கி : மிகுந்த யோசனைக்கு பின் எழுதிய பதிவு இது. பதிவுலகம், நிஜ உலகம் என எந்த முகமூடியும் போட்டுக்கொள்ளாமல், என் மெய் உலக நண்பர்களையும் என் முகமறிந்தே இணையத்திலும் தொடர விட்டிருக்கிறேன். ஆகவே, என் கருத்துக்கள் எந்த அளவு என் மெய் உலக வாழ்க்கையையும் பாதிக்கும் என இதற்கு முந்தைய பதிவுகளும் எனக்கு உணர்த்தி உள்ளன. இப்பதிவு, சில மெய் உலக நண்பர்களை காயப்படுத்தலாம். ஆனால், இதற்கான இன்றைய தேவை, என்னை எழுத வைக்கிறது. பெயர்கள் இருக்காது. ஆனால், உங்கள் மனசாட்சி உங்களை ஏளனமாய் நோக்கலாம், என்னை மன்னித்து விடுங்கள். ஏன் இந்த டிஸ்கி எந தெரியாதவர்கள் ஏன் எனக்கேட்டு என்னை சங்கடப்படுத்தவேண்டாம்.
சம கால உலகின் மிக முக்கிய Psychological and social பிரச்சனைகளில் ஒன்றான Bullyingயையும், அது இந்தியாவில், இந்திய கலாச்சாரத்தில் ஊன்றியுள்ள ஆழமான வேரையும் இக்கட்டுரை விவரிக்கிறது.
          சமர்ப்பணம் : ஏதோ ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த அனைவருக்கும்

"எனக்கு கமலை பிடிக்காது"

"ஏன்"

"அந்தாள் பர்சனல் லைப் சரியில்ல. ஒரு பொண்டாட்டிய வெச்சு வாழ தெரியல, கௌதமிய....."

"காந்தி  விஷயத்துல வீக் ஆமே, அப்ப்டியா?"

"எனக்கு அப்பவே தெரியும் இவளுக்கு எல்லாம் கல்யாணம் சரி பட்டு வராதுன்னு"

"ஏ.ஆர் ரகுமான் சரியான ஹெட்வெயிட் பா"

"இளையராஜா ஒரு நவபாப்பான், திமிர் பிடித்தவர்"

இவ்வாறான பிரபலங்களை பற்றிய ஏசுதல்ளில் தொடங்கி,

"அந்தா போகுது பாரு, அந்த பச்ச சுடி, லெஃப்ட் ல இருந்து செகண்டு, செம பிட்டு, நம்ம சீனியர் ஒருத்தரே முடிச்சிருக்காரு, ரூமுக்கு கூட்டிட்டு போயி, உம்ம்"

"கூப்பட கூப்பட அவ பாட்டுக்கு போறா மச்சி, தேவடியா, எவனாவது பளபளப்பா வந்தா தான் போய் ஊ..."

               தான் கூப்பிட்டா.ல் நிற்காமல் செல்லும் பெண் வரை தொடந்து நாம் அவர்களை கீழும் நம்மை மேலும் வைக்க பயன்படுத்துவது, தனி நபர் தாக்குதல். இதில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது அவர்களது அந்தரங்க வாழ்க்கை - செக்ஸ் லைஃப்.

"ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை

அந்த சண்டையில கிழிந்து டா

ஸ்ரீதேவி புண்டை"

                  இந்த வாய்ப்பாட்டு பாடலை, 90களில் தனது பால்யத்தில் இருந்தவர்கள் யாரும் கேட்காமல் இருக்க முடியாது. சிறுவர்கள் மத்தியில் கூட அவ்வளவு பிரபலம் இந்த பாடல். பிறந்தது முதல் இன்று வரை தமிழ் சமூகத்தில் நான் பார்த்து கவலையுறும் ஒரு விஷயம் இது. பிரபலங்கள் குறித்த வசைபாடலை கேள்விக்குட்படுத்தும் கீச்சு ஒன்றை சமீபத்தில் இட்டேன்.

"நம்மால் நேரில் புணர முடியாதவர்களை, வார்த்தையால் புணர்ந்துவிடுகிறோம்"

                 சினிமாவில் நாம் பார்த்து ஏக்கமுறும் பெண்களை, அடைய விரும்பும் பெண்களை, ரசிக்கும் பெண்களை, நம்மால் அவர்களது யோனிகளை நெருங்க முடியாது என்று உணர்ந்து வார்த்தைளால் நம் இச்சையை தீர்த்துக் கொள்கிறோம். பொது வாழ்க்கையும் சினிமாவிற்கும் அர்த்தம் தெரியாதவர்களா நாம்? சினிமாவிற்கு வந்த யாரும் பொது வாழ்க்கைக்கு வந்து விடவில்லை. அவர்களது அந்தரங்கத்தை பேசுவது, ஒருவர் கழிவறைக்குள் எட்டிப்பார்ப்பது போன்றது என்பது நமக்கு உரைப்பதே இல்லை.


                   ஓர் அரசியல்வாதியே ஆனாலும், பொது வாழ்க்கையிலேயே இருந்தாலும், அவர் அந்தரங்கத்துக்கும் பொது வாழ்க்கைக்கும் முடிச்சிட்டு கேவலப்படுத்துவது தவறு. கற்பழிப்பு குற்றச்சாட்டு, பாரலுமன்றத்தில் நீலப்படம் பார்த்தல் ஆகிய பொதுவெளி அல்லது மற்றவர்களை பாதிக்கும் சம்பவங்களை விட்டு விட்டு மற்றபடி வேறு எந்த ரீதியிலும் மற்றவர்களை பாதிக்காத அந்தரங்கத்தை கிசுகிசுவாக பேசுவது  அநாகரீகம் என்ற உணர்வு நமக்குள் எழ வேண்டும்.

              அவ்வாறு எழாததன் விளைவு தான் கலைஞரையும் குஷ்பூவையும் வைத்து ரிப்போர்ட்டர் கக்கிய வாந்தி. இது இப்போதில்லை, பெரியார் இருந்த போதே அவர் மீது வாரி இறைத்த சேர் இறைத்தவர்கள் ஏராளம். ஆனால், இப்பண்பை வெற்றிகொண்டான், எஸ்.எஸ்.சந்திரன் போன்ற திராவிடஅரசியல் மேடை பேச்சாளர்களும், பெண்களை தாக்கி, வார்த்தையாலேயே நிர்வாணப்படுத்தி அதை வளர்த்தார்கள் என்பதும் உண்மை. விகடன் இப்போது வெளியிட்டுள்ள டைம் பாஸ் பத்திரிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என்றே சொல்லலாம். அதில் இவற்றை தவிர வேறு ஏதுமே இல்லை.


இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை இரு விஷயங்கள் :

1. ஒருவனை தாக்க, அவனை தொழில் ரீதியாக, கருத்து ரீதியாக விமர்சிக்க முடியாத போது, அவனது தனி வாழ்க்கையை தாக்குதல்

2. ஒரு ஆணை தாக்குகையில் அதை அவன் சம்மந்தப்பட்ட பெண்ணின் மூலம் செய்தல் அல்லது பெண்ணை விமர்சிக்க ஆரம்பித்தாலே, அவளை ஒழுக்கம் கெட்டவளாக காட்ட முனைவது.

                  கொஞ்சம் யோசித்து பார்த்தால், நாம் அனைவரும் தினம் தினம் இதை கடந்து வருவதையும், சில நேரம் கொஞ்சமும் லஜ்ஜையின்றி அதை செய்தும் வந்திருக்கிறோம். குடும்பத்துக்குள் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட சினிமா குறித்து பேசத்துவங்கி, அதில் இருக்கும் கிசுகிசுக்களில் கொணர்ந்து நிறுத்துகிறோம். நம்மை பார்த்து வளரும் குழந்தை வேறு எப்படி வளரும்???


இந்த கட்டுரை எழுத தொடங்கிய போது, நண்பர் ஒரு ட்விட்லாங்கர் போட்டார். http://www.twitlonger.com/show/l4lobs

                அதில் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பி இருந்தார். ஒருவனை விமர்சிக்க/ கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத இச்சமூகம் அவனை வம்புகளாலும், வசைகளாலும் தனி நபர் தாக்குதல்களாலும் எதிர்கொள்ளும் ஒரு சமூகம் உருப்பட எதாவது வாய்ப்புள்ளதா? எந்த அறிவுள்ள பண்பட்ட ஒரு சமூகமாவது இதை அனுமதிக்குமா? உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்றே நினைவு படுத்துகிறேன். நீங்கள் செய்வதைப்போல, எவனோ ஒருவன் உங்கள் தாயையும், உங்கள் மனைவியையும் இதே சுடு சொற்களால் தாக்குவான். அதற்கு அதை ப்ரமோட் செய்த விதத்தில் சமூகத்தில் ஒரு அங்கமான நீங்களும் பொறுப்பு.

                           இரண்டாவதுக்கு வருவோம். பெரும்பாலும், ஓர் ஆணை திட்ட அவன் தாயை/மனைவியை தாக்குவதில் தொடங்கி, இப்படி தனி நபர் தாக்குதல் நடத்தும் பழக்கம் வரை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இது பெண்களுக்கு என மட்டும் நாம் கட்டமைத்து வைத்திருக்கும் "Chasity" அல்லது புனிதத்தன்மையில் தொடங்குகிறது.
"பொம்பள குடிச்சா தப்பு" "பொம்பள இப்படி தான் நடக்கணும்". இவ்வாறான கருத்துக்களை எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி வரை அத்தனை சினிமாக்களும் நமக்கு திரும்ப திரும்ப போதித்து வருகின்றன. அவள் ஒழுக்கங்கெட்டவள் என நிறுவி விட்டால் போதும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஆழப்பதிகிறது. எல்லா கல்லூரிகளிலும் ஒரு அழகிய பெண் "அவ தேவடியா மச்சி" என குறிக்கப்படாமக் இருந்திருக்கவே முடியாது. அவளை தன்னால் அடைய முடியவில்லை, அவளோடு பேச முடியவில்லை என்ற இயலாமையின் வெளிப்பாடு இது.



                      பெண்களுக்கு எதிரான இந்த மன நிலையை இங்கே சுட்ட காரணம், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடயவை. சமூக சீர்திருத்தம் செய்த நிறைய பேர் தொடாத ஒரு ஏரியா இது. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதில் எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்தல்ல. ஹிஜாப் அணிவிக்கும் இஸ்லாமிற்கும், பீரியட்ஸை தீட்டாக கருதும் இந்து மதத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

                  இச்சமூகம் இதே நிலையை எவ்வித மாற்றமும் இன்றி இப்போதுள்ள இதே மன நிறைவோடு தொடருமானால், "ஆமாம் அவ நைட்டு ஒம்போது மணிக்கு வெளிய வந்தா அதான் நான் ரேப் பண்ணினேன்" போன்ற வாதங்களை கோரஸாக கேட்கும் வாய்ப்பு சீக்கிரமே ஏற்படும்.

பின் இணைப்பு :

சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றும்,  டான் அசோக்கின் கட்டுரையும் இதே பொருள் குறித்து பேசுகின்றன.

குறிப்பு :

                       நண்பர்கள் தயவு செய்து, இதில் அச்சிலேற்றமுடியாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவேண்டும். எல்லாம் தெரிந்த வார்த்தைகள் தானே? அச்சில் பார்த்தால் மட்டும் குடியா மூழ்கிவிடப் போகிறது என்ற எண்ணம் மட்டுமல்ல அதை அப்படியே இட காரணம். இப்பதிவின் நோக்கம், இவ்வார்தைகளை உபயோகப்படுத்துபவர்களை உலுக்க வேண்டும் என்பதற்காக.

Wednesday, February 6, 2013

மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!


 வேச'தாரி

புணர்ந்து களைத்த மூன்றாம் ஜாமமொன்றில்

 அப்பெயர்தெரியாதவளை உசுப்பிக் கேட்டேன்

"பெண்ணுரிமை குறித்து என்ன நினைக்கிறாய்?"

"நினைத்தவரை புணர்வதும்

 நினைத்த வரை புணர்வதும்"

என்றாள்.





மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!


 மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி ஒன்று

மாண்டு போனது

ஓவென்று அரற்றினார்கள்

அழுது புரண்டார்கள்

கொடியெல்லாம் அரை கம்பத்தில் பறக்க விட்டார்கள்

 புரட்சி கீதம் பாடினார்கள்

 மௌனமாய் மெழுகுவத்தி ஏந்தி நடந்தார்கள்

 நல்ல நகைச்சுவைக்கும் சிக்கனமாய் சிரித்தார்கள்

 மகிழ்ச்சியாய் இருந்தவர்களை இரக்கமில்லாதவர்களே என தூற்றினார்கள்

 மூன்றாம் நாள் வாடை அடிக்கையில் உறைத்து

 புதைக்க மறந்த வண்ணத்துப்பூச்சியை ஜன்னல் வழி வீசி எறிந்தார்கள்

 அது குப்பை தொட்டிக்கு அருகே விழுந்தது!




                                                         



மதத்தலைவர்கள் : புறவாசல்


 நண்பர்களே இது கொஞ்சம் முக்கியமான தருணம், தமிழகம் இன்று எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது?

                                 மத உணர்வுகளை புண்படுத்துகிறது என விஸ்வரூபத் தடையை அடிப்படையாக நினைத்து ஒவ்வொரு படத்திற்கு எதிராகவும் வரிந்து கட்டி நிற்கின்றனர், மத வெறி பிடித்தவர்கள். வருங்காலத்தில் பச்சை நிற சட்டோயோ, காவி நிற சட்டையோ அல்லது வெள்ளை நிஜாரோ வில்லன் அணிந்து வந்தால் அது கூட என்னை புண்படுத்துகிறது என இவர் துள்ளிக்குதிக்க வாய்ப்புள்ளது. யார் இவர்கள்? இந்தியா என்ற மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் பிரதமர் கூட ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நியாமாகவோ இல்லாமலோ ஒரு தேர்தல் வைத்து தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், இவ்வளவு பெரிய மதங்களின் அதுவும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களில் (இந்து - இந்தியா,நேபால் மற்றும் உலமெங்கும், கிறஸ்தவம் - உலகெங்கும் , இஸ்லாம் - உலகெங்கும்) பரவியுள்ள மதங்களின் தலைவர்களாக தங்களை தாங்களே அழைத்துக்கொள்ள இவர்கள் யார்?  நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவன், என் மதத்தின் தலைவன் என்று அழைக்கப்படும் ஒருவன் மீகக்கீழானவன் என நான் கருதும் பட்சத்தில் அவனை எப்படி நீக்குவது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல், மதச்சின்னம் இட்டவன் எல்லாம் மதத்தலைவனா?

          எல்லா மதங்களை பின்பற்றும் நண்பர்கள் பலர் நமக்கு உள்ளனர். மதம் சார்ந்த எல்லா முட்டாள்தனங்களையும் அழிக்க வேண்டியது நம் கடமை தான் எனினும் அதில் முதன்மையானது, மதம் சார்ந்த அரசியல் அழிப்பு. அது இந்துத்வா ஆனாலும் சரி, அல்லது இஸ்லாமிய/கிறிஸ்துவ மத சார்ந்த அரசியல் ஆனாலும் சரி. அது அழிக்கப்படவேண்டியதே. சில புல்லுருவிகள் மதத்தை பின்பற்றும் நண்பர்களின் தலைவனாக தங்களை புறவாசல் வழியில் வந்து நிறுவிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

     இந்த மூன்றாம் தர தலைவர்களை, அரசாங்கமும் மதத்தை பின்பற்றும் மக்களும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். ஏதோ, அந்த மதமே இவர்கள் பின்னால் நிற்பது போன்ற தோற்றம் கலையப்பட வேண்டும்.

     தில் இருந்தால், உங்கள் மதத்தில்/ஜாதியில் உள்ள மக்கள் அனைவரையும் ஜன நாயக ரீதியில் ஓட்டுப் போட வைத்து தேர்தல் நடத்தி நீங்கள் தலைவர் என நிரூபியுங்கள். ராமதாஸ் தானே என் ஜாதிக்கு நான் தலைவன் என்று சொல்லிக்கொள்வது போலத்தான் நீங்களும், உங்களை மக்கள் தலைவனாக மட்டுமல்ல மனிதனாக கூட ஏற்கவில்லை. உங்களை கொண்டாடவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு வழியின்றி சகித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

                 

Tuesday, February 5, 2013

2100 இல் செய்திகள் - காமெடி கும்மி!

Disclaimer : இதில் வரும் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே. நீங்களை புண்பட்டுக்கொண்டால், சங்கம் பொறுப்பேற்காது. இதற்கு தடை கோரி கோர்ட்டுக்கெல்லாம் சென்று இதை நிறைய பேரை படிக்க வைப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் எனக்குத்தான் லாபம்!


                             
 ===> ஸ்ருதி ஹாசனின் மகனும், கமல் ஹாசனின் பேரனுமான நடிகர் சந்திர ஹாசனின் படத்திற்கு "பொந்து" அமைப்புகள் எதிர்ப்பு. மாறுவேடப்போட்டிக்காக ராமன் வேஷமிட்ட குழந்தை ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மனதை புண்படுத்தியதாக புகார்.

         இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய பொந்து அமைப்பின் தலைவரும் ஓரே உறுப்பினருமான மாகன் ஐஸ்க்ரீம் முட்டை கலந்த  ஒரு ஆபாசமான உணவு, இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என ஆவேசமாக கதறினார்.

===> பூந்தென்றல் படத்தின் ஸ்டில்களை தஸ்லாமிய அமைப்புகளிடம் போட்டுக்காட்டிய படத்தின் இயக்குனர், படத்தின் ஸ்டில்களை சிறு மாற்றங்களோடு அனுமதித்த கருணை உள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

       இது குறித்து அவர் கூறியதாவது : மொத்தம் இருந்த 203 ஸ்டில்களில் ஓரத்தில் பச்சை கலர் தெரிந்தது, வெள்ளை சட்டை போட்ட ஒருவர் முத்தம் கொடுத்தது போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் சீன்கள் மட்டும் நீக்கப்பட்டன. நாளை, பொந்து அமைப்புகள் படத்தை பார்வையிட வருவதால், காவி வண்ணத்தை அங்குலம் அங்குலமாக அலசும் டெக்னிகல் வேலை நடைபெற்று வருகிறது.

===> பெருக்கல் குறியை தவறாக பயன்படுத்துகிறார்கள், கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த, தத்தோலிக்க தருத்தவை எதிர்ப்பு.

           இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார், தருத்தவை தலைவர். கணித ஆசிரியர் சங்கத்தை அணுகிய போது, அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், சங்கத்தை கலைத்துவிட்டதாகவும், தானே இந்த சேரை தூக்கிச்செல்ல வந்ததாகவும் தெரிவித்தார்.

===> மலாலாவை பார்த்து தன் பெயர் மலாலா என்ற பெண் வீட்டில் இருந்து எட்டிப்பார்ததற்காக தலிபான்களால் சுடப்பட்டார். இது குறித்து எதிர்ப்பு தெரிவித்த பாக்கிஸ்தான் பிரதமர் "இது மிகவும் துரதிஷ்டமானது" என்றார். பின்னர் உள்ளே சென்றவர் பதட்டத்துடன் திரும்பி வந்து, " நான் துரதிஷ்டம் என குறிப்பிட்டது, அந்தப்பெண் எட்டிப்பார்த்ததை, துப்பாக்கி சூட்டை அல்ல, திரித்து விடாதீர்கள் அய்யா," என கண்ணீர் மல்க வந்திருந்த இரண்டு மூன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

===> மலாலா விவாகரம் குறித்து அதிருப்தி தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த 241 அமைப்புகளும் ஒரே குரலில் "இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை" என்றன.

       இது குறித்து பேட்டி அளித்த பைய காணம் புதின் "இது மிகவும் கொடூரமான செயல், இது போன்ற செயல்களை குல்லா ஒரு போதும் மன்னிக்கமாட்டார். இதை போன்ற அதிகப்பிரங்கித்தனங்களை நிறுத்திக்கொள்வதே இதற்கெல்லாம் தீர்வு. சினிமாக்கள் மக்களை அளவுக்கு மீறி கெடுக்கின்றன, அந்த பெண் எட்டிப்பார்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

===> தூத்துக்குடியில் நுழைய பீமதாசுக்கு தடை விதிப்பு : எதிர் ஜாதிகளின் சதி என பீமதாஸ் பரபரப்பு புகார்.

          பேட்டி (அவர் வாய்ஸில்) : " நான் கேக்குறேன். எதுக்கு பண்ற நீ காதல் திருமணம். நீங்க எங்க ஜாதி பொண்ணுங்கள கூட்டிட்டு போய் ஏமாத்துவ, நாங்க.." இதற்கு மேல் இவர் பேசியது வழக்கமாக இவர் உளறுவது தான் என்பதால், வாசகர்கள் பழைய பேப்பரை எடுத்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

===> கூடங்குளம் கழிவுகளை மதுரையில் கொட்ட மக்கள் எதிர்ப்பு. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இதனால் எந்தப்பிரச்சனையும் வராது என பேட்டி.

===>  அழகன் என்னும் படத்தில் சொட்டையர்களை கிண்டல் பண்ணும் விதமாக காட்சி. சீப்புக்காட்சி அல்ல சீப்பான காட்சி என சொட்டையர் சங்க தலைவர் பீமதாஸ் பரபரப்பு புகார்.

===> நெல்லையில் ஆறு வயது சிறுமி கற்பழிப்பு (மன்னிக்கவும், டெல்லியில் நடந்தால் போட்டுக்கலாம் என பொறுப்பாசியர் சொன்னதால், இந்த செய்தி அழிக்கப்படுகிறது)

===> அடுத்த பிரதமராக எல்லா தகுதியும் பூகுல் பூந்தியின் மகன், சின்ன பூந்திக்கு உள்ளது, திக்கற்ற குஜய் சிங் பேட்டி.

===> காதலர் தினத்திற்கு தடை கோரி பொந்து முக்கள் குட்சி முதலமைச்சரிடம் மனு. கலாவை ...இது... கலாச்சாரத்தை கெடுப்பதாக புகார்.

               இது குறித்து கூறிய பாகன் "என்ன மசுருக்கு காத்லீக்கிறீங்க. அவனவன் சாதியில் பாத்து வைக்கறத கட்டிக்கிட்டு மூடிகிட்டு இருங்க. நீங்க லவ் பண்ணி கட்டிகிட்டா, எங்க பொழப்பு எப்படி ஓடும், சங்கம் என்ன புடுங்கறத்துக்கா வெச்சிருக்கோம்" என்றார் ஆவேசம் தணியாமல்.

==> காதல் திருமணம் செய்ததால், விருதாசலத்தில் கலவரம். 1000 பேர் கொண்ட ஆயுதங்களடங்கிய கும்பல், ஐந்தாறு கிராமங்களில் இருந்த நிராயுதபாணிகளை கொளுத்தியது (மீண்டும் படிக்கவும், இது கலவரம், தாக்குதல் அல்ல - பொ.ஆ)

 இது குறித்து கையில் தீப்பந்தத்துடன் பேட்டியளித்த பீமதாஸ் : இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை (ஓடிக்கொண்டே ஒரு வீட்டில் தீ கொளுத்துகிறார், பின்னால் திரும்பி எலேய் மண்ணெண்ண என குரல் கொடுக்கிறார்) பின் நம்மிடம் திரும்பி "ஆங்.. எங்க விட்டேன், ம்ம் இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை, குலித்துகள் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டனர்" என்றார்.

                நல்லெண்ண, வேப்பெண்ண, கடலெண்ண, இந்த மதம் புடிச்ச நாயிக புண்பட்டா எனக்கென்ன :)



Monday, February 4, 2013

கமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை!

                 எனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள் கமலும் ஒருவர். ஒரு கலைஞனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே விஸ்வரூபத்தின் வெளியீட்டை மனப்பூர்வமாக ஆதரித்தேன். யூ ட்யூபிலேயே உள்ள கொலைக்காட்சிகளை விஸ்வரூபத்தில் எடுத்தால் எதிர்ப்போம் என்பது வெறும் ஸ்டண்ட்டு தான். ஆனால், இதுவே கமல் குறித்த என் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.



              சதிலீலாவதி தொடங்கி மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் என க்ரேசி-கமல் கூட்டணியை ம்ம்ம் டிவைன் என ரசித்து சுவைத்தவன் தான் நானும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். பொதுவில் ஒழுக்கம் குறித்து பேசிக்கொண்டு உள்ளுக்குள் அழுக்கை தேக்கும் கோமாளிகள் போல் அல்லாமல், தன் தாம்பத்திய/செக்ஸ் வாழ்க்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடித்தவர் என பல விஷயங்கள் அவரிடம் எனக்கு பிடிக்கும். இவ்வளவு ஏன்? ஸ்ருதி ஹாசனை அவர் வளர்த்த விதம் இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான். இதில் என்ன ஆச்சரியம் என்பவர்கள், சம காலத்தில் ஐஸ்வர்யா ரஜினி எவ்வாறு வளர்ந்தார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.



           "ஹே ராம்" போன்ற படம் எடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். இதில் சுவையே காந்தி "ஹே ராம்" என்றே கத்தவில்லை என்றது தான். கோட்சேவின் கூற்றுப்படி அவ்வளவு சக்தி வாய்ந்த தோட்டாக்களை நெஞ்சில் தாங்கிய வயதான ஒருவர் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது. நாம் காந்தியை பிம்பமாக பார்த்து பழகிவிட்டதால், காங்கிரஸ் பேரியக்கம் அப்படி அதை வார்த்து விட்டதால் தான் இப்படி. சரி போகட்டும். இப்படி பல விதங்களில் எனக்கு கமலை பிடிக்கும்.



                   நிற்க. ஆனால், நல்லதொரு ரசிகனின் குணம், வெறுமனே முகஸ்துதி செய்வதல்ல. விமர்சிப்பதும் தான். எனக்கு கமலின் சில விமர்சனங்களும் ஆதங்கங்களும் இருக்கவே செய்தன. முதலில் நான் கண்டிக்க வேண்டியது, தேவர் மகனிலும், விருமாண்டியிலும் கமல் கக்கிய நீறு பூத்த நெருப்பாக ஜாதி வெறி. இதிலெல்லாம் ஜாதி வெறியை தூண்டு காட்சிகள் இருக்கு என்று நான் சொல்லவில்லை. இல்லாமலிருந்தால், நன்றாய் இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன். முதலில், இது எப்படி ஜாதி வெறியாகும் என கேட்பவர்களுக்கு : ஒரு படம் பார்க்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஸ்படர் மேனோ அல்லது நம்ம ஊர் சிவாஜியோ அல்லது அந்நியனோ, திரை அரங்கை விட்டு வெளியேறிய சில மணி நேரத்துக்கு நாம் நம்மை அந்த ஹீரோவாகவே நினைத்துக்கொள்வோம். நம் நடை பாவனை எல்லாம் அவரை இமிடேட் செய்ய முயற்சிக்கும். சிறு வயதில் அதிகமாய் இருக்கும் இந்த எண்ணம், வயதாக வயதாக குறையும். ஆனாலும், என்ன தான் தைரியசாலியாய், நாத்திகனாய் இருந்தாலும் கூட ஒரு திரில்லர் பார்த்துவிட்டு இருட்டை பார்த்தால் சற்று கிலி பிடிக்கத்தான் செய்யும். அதே தான். பெயரின் பின்னால் தேவர், நாடார் என சாதிப்பெயர்கள் ஒட்டிக்கொண்டிருந்த காலகட்டம் இது.


"போற்றிப்பாடடி பொண்ணே..தேவர் காலடி மண்ணே...
 பெருசெல்லாம் சொன்னாங்க... சொன்னபடி நின்னாங்க...
 முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான்...
  முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....1 2 3 அல்ல ( நூத்து கணக்காம்)"

                   இளசுகள் மத்தியில் சாதி வெறி தூவ இது போதாதா? தன் தந்தையை, தன் குலத்தை பற்றிய பெருமை, அதன் போதை அவன் மனதில் ஏறாதா? இதே படத்தில் வில்லனும் அதே சாதி ஆனாலும், அவனாக தன்னை கற்பனை செய்ய ரசிகன் என்ன கிறுக்கனா? ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள். கிரேக்க கொடுங்கோல் மன்னன் கலிக்யூலா முதல் ஹிட்லர், ஜப்பான், அமெரிக்கா (இரண்டாம் உலகப்போரின் போது) வரை கடவுளின் வழியில் நேரடியாக பிறந்தவர்கள் நாம் எனக்கூறி தான் போர் வெறியை தன் சிப்பாய்களுக்கு ஊட்டினார்கள்.  விருமாண்டியிலும் இதே ரீதியில், தான் சண்டியர் என குறிப்பிட்ட இளைஞர்கள் திரிய சில திரிகள் இருந்தன.



      இரண்டாவது, நம் தமிழ் சமூகம் முட்டாள்கள் நிரம்பியது (கட்ஜு சொன்னது போல). இதில் வேடிக்கை, அதில் முட்டாள்கள் பலரும் அறிவு ஜீவி பட்டத்தை கட்டிக்கொண்டு ஒரு சமூக பாதுகாப்பில் இருப்பது தான். சரி, விஷயத்திற்கு வருவோம். இத்தகைய முட்டாள் சமூகத்துக்கு, செய்தி சொல்ல சரியான ஊடகம் சினிமா தான். யோசித்து பாருங்கள், எம்.ஜி.ஆருக்கு பிறகு இங்கு சினிமா தொடர்பில்லாத முதல்வர்களே இல்லை. சினிமாவையும், நிஜத்தையும் பிரித்து பார்க்க முடியாத மக்கள் தானே, விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க காரணம்? இத்தகைய சூழலில், பகுத்தறிவை வளர்க்கும் வண்ணம் அவர் ஒரு படம் எடுக்கலைன்னு தான் சொல்லுவேன். "அன்பே சிவம்" ஒரு அற்புதமான படம். எனக்கு அதில் நிறைய மாற்றங்கள் வேண்டும் என தோன்றினாலும், தமிழ் சினிமாவிற்கு இதுவே மிகை. (கழுத்து வரைக்கும் பட்டன் போட்டது அவ்வ்) இதையும் மாற்றினால், அது ஈரானியப்படமாகிவிடும், ஒரு பய தியேட்டருக்கு வரமாட்டான்.



       ஆனால், அன்பே சிவம் தவிர்த்து பெரிய அளவில் கமல் நாத்திகத்தை பரப்பவில்லை. இந்து மதத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டினாலும், சைவத்தை மட்டுமே ஓட்டுவதாகக்கூட ஒரு புகார் உண்டு. ஆனால், கமல் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என நான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். உன்னைப்போல் ஒருவனிலும் கூட அவர் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் ஓட்டிய காட்சியெல்லாம் உண்டு. அவர் சொல்ல வரும் நுண்ணிய கருத்துக்களெல்லாம் ஏ சென்ட்டரோடு முடிந்து போய் விடுவதில் எனக்கு ஏக வருத்தம் தான்.

       மற்றபடி, எனக்கு எல்லா மதங்களும் முட்டாள்தனங்கள் தான் என்பதால், மத உணர்வுகளை புண்படுத்துதல் பற்றி பெரிதாய் கவலையில்லை. முட்டாள்கள் கும்பலாக இருப்பதினால், தனி மனிதன் அவர்களை அறிவின் பக்கம் இழுக்க நினைப்பது ஆபத்து தானே என்பதால் அதை வருத்தத்தோடு தவிர்க்க வேண்டியுள்ளது.


கமல் ரசிகர்களுக்கு ஓரு ட்ரீட் விடீயோ :



கடைசியாய் கமலுக்கு சில வரிகள் :

                       நீங்கள் வியாபாரி என எத்தனை தடவை நீங்களே சொன்னாலும், அதை வெறுமே நம்ப மனம் மறுக்கிறது கமல். தமிழகத்தில் போதுமான அளவு குரல் உள்ளவர் நீங்கள். செய்ய வேண்டியவை நிறைய உள்ளது ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும்.

                                                                                                                                                                                செய்வீர்கள் என்ற  நம்பிக்கையில்,
                                                                                                                                                                                         உங்கள் மற்றுமொரு ரசிகன்



Saturday, February 2, 2013

எனக்கு பவர் ஸ்டாரை பிடிக்காது!

         ஒரு காலத்தில் பவர் ஸ்டார் என கூகுளில் தேடினால் "பவன் கல்யாணின்" போட்டோக்கள் வந்துவிழும். தெலுங்கில் நீண்ட நாளாக அவர் தான் பவர் ஸ்டார். சிறிது காலம் முன்பு, தெலுங்கில் இப்படி ஒருவர் இருப்பது கூட தெரியாமல், தமிழ் படங்களின் ஒருவர் தலைகாட்டினார், தமிழ் படமென்றால், யாருமே பார்க்காத, அவர் மட்டுமே எடுத்து பார்க்கக்கூடிய படங்கள். அவர்...இவர்...



          பவர் ஸ்டாரை பற்றி நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என நினைத்திருந்த பதிவு இது. கண்ணா படம் வந்த போது எழுதினால் பத்தோடு பதினோன்றாக ஆகிவிடக்கூடும் என்பதாலும் நேரமின்மையாலும் இவ்வளவு லேட்.

      எனக்கு லட்டு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரிரு இடங்களைத்தவிர எங்குமே சிரிப்பு வரவில்லை. சுத்த அடாசு. ஆனாலும், படம் ஹிட். முன் பின் தெரியாத முதல் பட நடிகரை (லத்திகா எத்தனை பேர் பார்த்தீர்கள்??) கண்டவுடன் விசில் பறக்கிறது. ரஜினி, கமல் எல்லாம் அடைந்த கலை உச்சங்களை அவர் தொட்டுவிடவில்லை தான். ஆனால், இவர்களில் யாருக்கும் முதல் படத்தில் இப்படியொரு கைத்தட்டல் நிச்சயம் கிடைத்ததில்லை. எனக்கு பவர் ஸ்டாரையும் பிடிக்காது. அவருக்கென நடிப்போ, அதற்கேற்ற உடலசைவுகளொ வேறெதுவுமோ இல்லை. அவர் ஒரு "நடிகராக" ஜெயிக்கவில்லை. பிற்காலத்தில் அவர் நடிப்புத்திறமையை மெருகேற்றிக்கொள்ளவேண்டும் என ஜெமோ போன்ற  நிகழ் கால சினிமா கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்.

         பவர் ஸ்டார் அடைந்த உச்சம் குறித்தோ, அவரின் நிலை குறித்தோ எதுவும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால், பவரின் இன்றைய நிலை மிக முக்கியமான இரண்டு தரவுகளை நமக்கு உரக்கச்சொல்கிறது.

     ஒன்று இணையத்தின் வளர்ச்சி. ஒரு வேளை பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை இல்லாதிருந்தால் லத்திகாவோ, பவர் ஸ்டாரோ சுத்தமாக கவனிக்கப்படாமலேயே தான் போயிருப்பார்கள். தன்னை தானே ஹீரோ என்று அழைத்துக்கொண்டு இவர் செய்த காமெடிக்களுக்கென இவரை ஓட்ட ஒரு பட்டாளம் உருவானது. கிஞ்சித்தும் சீரியஸ்னெஸ் இன்றி இவர் சீரியஸாகவே பேசுவது போல பேசிக்கொண்டிருப்பதை கிண்டல் அடிக்க அதன் மூலம் தன் கெத்தை உயர்த்திக்கொள்ள என முக நூலில் ஸ்டேட்டஸுகள் பறந்தன. இதில் இரண்டு விதமான ஸ்டேட்டஸுகளை பார்க்க முடிந்தது. ஒன்று, இவன் யாரடா கோமாளி என ஏளனம் செய்யும் வண்ணம் ஆரம்பித்த ஸ்டேட்டஸுகள். இரண்டாவது, ரஜினி ஜோக்குகள் பாணியில் வஞ்சப்புகழ்ச்சிகள்.

உதாரணத்திற்கு ஒன்று,

பவர் ஸ்டார் ஒரு நாள் விமானத்தில் இருந்து தன் பர்ஸை கீழே விட்டுவிட்டார்,

ஸ்விஸ் பேங்க் உருவானது.

இது ஒரு பழைய ரஜினி ஜோக். பவர் ஸ்டாருக்காக தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டது. எப்போதுமே மனித மனம், தன்னை விட ஒருவனை கீழாக நினைக்க, அல்லக்கையாக பார்க்க, தான் ஓட்டினால் கேட்டு சகித்துக்கொள்ள ஒருவனை தேடுகிறது. சிக்கியவர் பவர் ஸ்டார். அது முக்கியமல்ல. இணையத்தின் வீச்சம் எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தீர்களா?


        இப்போஸ்டரை அடித்தவர்கள், இவரின் நடிப்புத்திறமையை பார்த்து ரசிகர்களானவர்களா?

   ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு, இணையத்தை வைத்து ஒரு புரட்சி உருவாவது (எகிப்து, துனிசியா, இரான் எலெக்ஷன்) போல நடக்குமா என்று கேட்காதீர்கள். ஒரு பொது மொழி வேண்டும் அதற்கு. அதற்கும் மேல் இப்படி ஒவ்வொருவருவரும் தனக்கென படித்தோ படிக்காமலோ தெரிந்தோ கேட்டோ வைத்திருக்கவேண்டுமே என ஒரு கருத்து வைத்திருக்கவும் கூடாது.

இரண்டாவது முக்கியமான விஷயம், இவர் வெற்றி பெற்ற வழி. உங்களுக்கு எதில் அதிக கூச்சம்? மேடையில் பேசுவதிலா? மனைவியின் அப்பாவோடு உரையாடுவதிலா? நடனமாடுவதிலா? மற்றவர்கள் முன் மனைவியை செல்லப்பெயர் சொல்லி அழைப்பதிலா? இப்படி நிச்சயமாக ஏதேனும் ஒரு கூச்சத்தால் நீங்கள் அவதிப்பட்டிருப்பீர்கள். யாராவது ஓட்டுவார்களோ என ஏதேனும் ஒரு விஷயத்தை நிச்சயம் செய்யாமல் விட்டிருப்பீர்கள்.

     ஆனால், எத்தனை பேர் அதை விடாப்பிடியாய் முயன்று இருக்கிறோம்? அதைத்தான் செய்தார் பவர் ஸ்டார். ஆங்கிலம் பழகும் ஒருத்தியை "பீட்டர் டா" நாம் கிண்டலடிப்பது போலத்தான் பவர் ஸ்டாரும் கிண்டலடிக்கப்பட்டார். ஆனால், இப்படி ஒரு மனிதன் சீரியஸான ஒரு முகமே இல்லாமல், நிஜ வாழ்க்கையில் கூட காமெடியாகவே வாழ்ந்துவிட முடியுமா என ஆச்சரிப்படும்படியாக இன்று வரை ஒரு இடத்தில் கூட எந்த வித எடக்குமடக்கான கேள்விகளுக்கும் கூட சிரித்த படியே பதில் அளிக்கிறார்.

      யாரோடு நடிக்க விருப்பம் என்றால் "ஐஸ்வர்யா" என்கிறார். ரஜினி எனக்கு போட்டி என்கிறார். நியாமாக கோபம் வர வேண்டிய நமக்கு சிரிப்பு வருகிறது. காரணம், சொல்லும் போது அவருடைய பாடி லேங்குவேஜ் அப்படி. அது ஒரு நகைச்சுவை என எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவர் தனக்கு உருவாக்கிக்கொண்ட பிம்பம் அப்படிப்பட்டது. சினிமாக்களில் செந்திலை பார்த்து இப்படி நிஜ உலகில் கவுண்டமணி போன்ற ஒருவர் இருந்தால் கூட செந்தில் போல ஒருவர் இருக்க முடியுமா? என்று தானே எண்ணி இருந்தோம். இதோ, நிஜ உலகில் ஒருவர், தன் மேல் எந்த ஒரு அறிவு ஜீவி பிம்பத்தையும் தரிக்காமல், சிரிப்பு முலாம் பூசிக்கொண்டு நிற்கிறார். இவர் விதூஷகர் கூட இல்லை. ஆனாலும், எல்லோருக்கும் இவரை பிடிக்கிறது. சர்கஸில் கோமாளியை ரசிப்பது போல, எள்ளல் செய்தாவது பவர் ஸ்டாரை ரசிக்கிறோம்.

   நம்மை பொறுத்த வரை பவர் ஸ்டாரை ஓட்டியது, கலாய்த்தது எல்லாமே " நமக்கு ஒரு அடிம சிக்கீட்டாண்டா" பாணியில் செய்யப்பட்டவை. ஆனால், அவரோ அலட்சியமாக சற்றும் பொறுமை குறையாமல் ( நம்ம கோட்டு கோபி விடாப்புடியா ட்ரை பண்ணியும் கூட) இப்போது நினைத்ததை முடித்து விட்டார். இப்போது ஷங்கரின் "ஐ"யில் முக்கிய கதாப்பாத்திரம் பவர் ஸ்டார். அவர் இன்னமும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார் (இதே திறமையோடு எதையும் வளர்த்துக்கொள்ளாமலிருந்தால்). ஆனால், அவர் கற்றுக்கொடுத்த பாடம் முக்கியமானது.

"என்ன நீ கிறுக்கன்னு நெனச்சு கலாய்ச்ச, நான் உன்ன லூசு ஆக்கி பாசு ஆகி போயிட்டே இருக்கேன்"