Flipkart

Amazon

Amazon

Monday, July 8, 2013

அப்பறம் பாஸ், Life எப்படி போகுது?

                               ஒரு பால்ய தோழியுடன் நீண்ட நாட்கள் கழித்து நேற்று பேசினேன். ஒரு இந்திய முதலாளியின் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எம்.எஸ் செய்வதாக சொல்லி வேலைக்கு எடுத்தார்கள். தோழி B.sc.. எம்.எஸ் செய்ய 16 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் (Only Engineers Qualify). இது ஒன்று தான் வழி என்பதால் ஏகப்பட்ட B.Sc,BCA  படித்தவர்கள் இதில் சேருவார்கள். நான்கு வருட ஒப்பந்தம். நான்கு வருட வேலை, வார இறுதியில் கல்லூரி.

                                  வாழ்கை செட்டில்ட்ன்னு வேலைக்கு ஆர்வமா சேர்ந்தாள் தோழி. நாலு வருஷம் கழிச்சு வெளிநாடு போலாமுன்னு பாஸ்போர்ட் மொதக்கொண்டு எடுத்து வெச்சாச்சு. ஒரு எட்டு மாசம் ஆச்சு. வேலை. காலேஜ். வேலை. காலேஜ். மெஷின் லைஃப். ரொட்டீன் லைஃப், படிக்கவே போரடிக்கல? அதே தான் அவளுக்கும். வெளில வரும் போது Work Experience Certificate கிடைக்காதாம். MS படித்ததால், Student Internship ஆகத்தான் கணக்காம். அவள் குரலில் ஒரு வெறுப்பு தொனித்ததை உணர முடிந்தது. பெங்களூர், சென்னை என மாற்றி மாற்றி பணிபுரிவதால் பெரிய அளவில் நட்பு வட்டமும் இல்லை. "நாலு வருஷம் கழிச்சு வெளி நாடு போகணும்ன்னு இப்ப ஆசையே இல்ல டா... நாலு வருஷம் முடிச்சு இந்த சாஃப்ட்வேர் கருமத்த விட்டு வெளிய வந்தா போதும்ன்னு தோணுது"ன்னா.

                                   ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கமுள்ள எவரும் பார்த்திருக்கூடிய ஒரு படம் "The Shawshank Redemption". அதிலொரு காட்சி.  ஐம்பது ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை விடுவித்து வெளி உலகிற்கு அனுப்புவார்கள். அவர் அதை தடுக்க எவ்வளோ முயன்றும் முடியாது. வெளியில் சென்ற அவர் ஒரு வாரத்தில் தூக்கு போட்டு செத்துப்போவார். அற்புதமான காட்சி அது. அவரை பற்றி "He was Institutionalized" என்பார் அவர் நண்பர். அவருக்கு அந்த சுவருக்குள் தான் உலகம். அதை தாண்டிய உலகத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வாமை உள்ள பொருள் போல அதை தாண்டிய உலகத்தை அவர் மனம் மறுதலித்து விடும்.

                                   இங்கே பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை அப்படித்தான். அது ஒரு Routine. ஒரு வேளை அதிலிருந்து அவர்களை வெளியில் இழுத்தால் அவர்கள் செத்துப்போவார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. "Settle" என்ற வார்த்தை அதற்கனவே உயயோகப்படுத்தப்படுகிறது. என் கல்லூரி பேராசியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் "Settling business is done at the graveyard. We have to move our asses till then".

                                   இத்தனை இழுவை ஏன் போட்டேன் என்றால், இந்த கேள்விய சொல்லத்தான் "அப்பறம் பாஸ், Life எப்டி போகுது. என்ன பண்ணலாமின்னு இருக்கீங்க?". கிட்டத்திட்ட இதே கேள்வியை, பதங்களை மாற்றி, நிற்கும் பொசிஷனை மாற்றி , சட்டை கலரை மாற்றி பல உருவங்கள் கடந்த சில நாட்களாக என்னிடம் கேட்கின்றன. காரணமில்லாமல் இல்லை. கல்லூரியை முடித்து, கல்லூரி நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்த ஒரு பன்னாட்டு கம்பேனிக்காரன் கூப்பிடுவான் என காத்திருக்கும் அநேகர் எதிர்கொள்ளும் கேள்வி இது.

                                 எல்லோரும் கேட்பதால் மட்டுமல்லாமல், இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவு, ஒரு Self Note.  நான் நதி போல, எதை எதிர்கொள்ளப்போகிறேன் என எனக்கே தெரியாது, பாதை செல்லும் வழியில் அப்படியே போய்க்கொண்டே இருப்பவன். ஆனால், நிஜத்தில் எதற்கும் பணம் வேண்டுமே. அதனால் எதாவது செய்தாக வேண்டும். Travelஇன் மீது அதி தீவிர ஈடுபாடு உண்டு. அதற்கும் பணம் வேண்டும். இரண்டு ஒலிம்பிக்ஸ், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட், கால்பந்து, அப்பறம் ஒரு விம்பிள்டன் பார்க்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். 143 நாடுகள் பார்க்க வேண்டிய நாடுகள் என நான் தயாரித்துள்ள பட்டியலில் உண்டு.

                                    திருமணம் என புருவம் உயர்த்தினார் அப்பா. எனக்கானவள் எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறந்திருக்கிறாள் என இன்னமும் தெரியவில்லை என்றேன். சிரித்துக் கொண்டார். எங்களுக்குக்காக அதை மட்டும் பண்ணிக்கோ என்றார். "ம்ம்" என்றேன் வெறுமனே.

                                  நமது சமூக சூழலில் ஒருவரின் உட்பட்ச லட்சியமே, ஒரு பிள்ளை பெற்று அவனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைத்து, நம் சாதியில் ஒரு பெண்ணை கட்டி வைத்து, அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கும் நாம் அவனுக்கு செய்ததையே அவனை செய்ய வைப்பது. இது ஒரு முற்றுப்பெறாத கதை.

                                        நான் இதற்கு முற்றிலும் மாறானவன். எனக்கு மதமில்லை, சாதியில்லை. பொது வாழ்வில் மக்கள் பெருமை என கூறும் எந்த ஒரு அடையாள பாரத்தையும் நான் சுமப்பதில்லை. பொதுபுத்திக்கு விரோதமானவனை நேசிக்கலாம், ஆனால் கட்டிக்கொள்ள சரிப்படாது என்பாள் என் பழைய தோழி ஒருத்தி. சரி தான். இது வரை எந்தப்பெண்ணும் மாற்றிப்பேசியது இல்லை.

                                        ம்ம்... எங்கே விட்டோம். ம், பணம். பயப்படாதீர்கள். சாரு போல அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் உத்தேசமில்லை.எந்த ஆசையை எடுத்தாலும், பணத்தில் வந்தே முட்டுகிறது. பேசாமல் ஜனாதிபதி ஆகிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத இந்த மனசாட்சி கேட்டுத்தொலைக்காது. ஈமு கோழி போல எதாவது கரடி வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து ஏமாற்றலாம், ஆனால் இங்கும் மனசாட்சி இடிக்கிறது. சரி, எதாவது செய்வோம். ஆனால், இந்த ரொட்டீன் லைஃப் எனக்கு சரிப்படாது.  நான் செட்டில் ஆவது சுடுகாட்டில் தான்.

படம் ConAir. "You know what is insane. Working on a damn office from 9 to 5 for 50 years and then settling in a village, waiting for a day to die to save our dignity, that we go reach the rest room in time. That is insane"

என்னிடம் இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவின் சுட்டியை கொடுக்கப்போகிறேன். :-)

"மவனே இனிமே கேப்ப?"


Sunday, July 7, 2013

பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :


** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.

** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.

** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.

1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல்  நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.

2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.

3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பிறகு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்??

4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.

5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது? பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...

6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.

7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்)  என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(

8.  ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.

10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.

11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு  கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

12. எல்லோரும் சமூகத்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.

13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள்.  15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது??

14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.

15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.

16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற  ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.

17. Emotional blackmails can be tackled with emotional blackmails again and if not can be ignored.

பல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.

படம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(