Flipkart

Amazon

Amazon

Tuesday, September 23, 2014

ஜில் கதைகள் - "நான் அழகா இருக்கேன்னு தான் என்ன காதலிக்கறியா" - 3

https://www.facebook.com/SHAN4Luv/posts/862209690458916

இன்று தாமதமாகத்தான் அலுவலகம் சென்றேன். லிப்டிற்கு வெளியேவே ஜில் நின்றிருந்தாள். கூடவே அவளது தோழி ஒருத்தி. கருப்பாய், பூசினாற் போல் உடம்பு, முடியை தோள் வரை விட்டு கத்தரித்திருந்தாள்.

இருவருக்கும் ஹாய் சொல்லியபடியே உள்ளே செல்ல எத்தனித்தேன். ஜில் தன் இடது கையை நீட்டி, என் இடுப்பை வளைத்து இருந்த இடத்திற்கே தள்ளினாள்.

"வேல இருக்கு ஜில்லு"

"என்ன விட முக்கியமா?"

"சரி, சொல்லு"

"நான் அழகா இருக்கனா?"

"இதுக்குத்தான் நிறுத்தினியா... இந்த உலகத்திலயே...ஏன் ஏலியன்ஸ் எல்லாம் சேத்திக்கூட அழகான பெண் நீ தான்"

"அப்போ அதான் இல்ல"

"எதான்?"

"நான் அழகா இருக்கேன்"

"ஆமா"

"அப்போ, அதுனால தான் என்ன லவ் பண்ற இல்ல?"

"ஏய்... என்னாச்சு உனக்கு, லூசு மாதிரி பேசற... அப்படி பாத்தா எத்தன அழகான பொண்ணுங்க இருக்காங்க.."

"இப்ப தான், நான் தான் இருக்கறதுலயே அழகான பொண்ணுன்ன"

"உஸ்ஸ்... என்னம்மா வேணும் உனக்கிப்ப"

"இவ தான் சொன்னா... நீ என்ன காதலிக்கிறது வெறும் அழகுக்காகத்தானாம்...

அவளை முறைத்தேன்.

"எல்லாமே பார்வைல தான் ஜில்லு... இப்ப நான் உன்ன வர்ணிக்கற அதே மாதிரி இவளையும் காதலோட பாத்தா இவளும் அழகு தான்.."

"எங்க என்ன அசிங்கமாவும்...இவள அழகாவும் வர்ணி பாக்கலாம்"

"ம்ம்ம்... சரி"

மறுபடியும்.. ஜில் தனது தோழியோடு நின்றிருந்தாள். ஜில்லுக்கு சற்று மெலிந்த தேகம். மெலிந்த தேகமுள்ள பெண்களுக்கே உள்ள வெட வெட சரீரம். ஜில் புடவை கட்டினால், ஏதேனும் தலைவர் பிறந்த நாள் அன்று அலங்கரிப்பட்ட கொடிக்கம்பமொன்று நடந்து வருவது போன்றே தோன்றும். முகேஷ் கன்னங்கள், ஓமக்குச்சி நரசிம்மனின் இடை...

"ம்ம்...போதும் போதும்... இவள வர்ணி"

அவள் தோழி என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கூர்மையான லேசாக மையிட்ட கண்கள். கூர் நாசி. அளவெடுத்து செய்வதில் சற்றே அம்மா பாசமாய் இரண்டு கரண்டி அதிகமாய் போட்டது போல உடம்பு. தோள் வரை புரண்ட கூந்தல் அடர் கருப்பு, பினிஷிங்க் டச்சாக லேசாய் சுருண்டிருந்தது. ஒற்றைக் கையை தன் ஸ்கேட்டிங் வித்தை ட்ராக் இடுப்பில் வைத்து இரு விழிகளையும் வலது ஓரம் கொணர்ந்து....

"ஏய் நிறுத்து நிறுத்து..."

"சொல்லு"

"அப்ப நீ அவளையும் ரசிச்சுருக்க.."

"அய்யோ...அதில்ல ஜில்லு..."

"காதலிச்சாத்தான் அவள அழகா வர்ணிக்க முடியும்ன்ன... அப்ப அவளையும் காதலிக்கற..."

"அடப்போங்கடி...."

Thursday, September 18, 2014

ஜில் கதை‬ - 2

https://www.facebook.com/SHAN4Luv/posts/860157000664185

இன்று மதியம் தான் ஜில்லை பார்க்க நேரம் வாய்த்தது. காலையில் இருவருவமே அவரவர் அமேரிக்க ஆன்சைட்டிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தோம். மதியம் என் பழைய டீம்மேட் ஒருத்தனை பார்க்க செல்கையில் எதிர்பட்டாள்.


இந்த முறையும் வழியை மறித்தபடியே தான் நின்றாள். அவளை கவனியாயது போல, இயல்பாக எக்ஸ்கியூஸ் மீ சொல்லியபடியே அவள் இடுப்பை தொட்டு இன்னொரு புறம் நகர்த்த பார்த்தேன். கையை தட்டிவிட்டு விட்டு முறைத்தாள். இரு கைகளையும் தனது மணல் முகடுகளுக்கு குறுக்காக கட்டியபடி, இடப்புறமாக சற்றேறக்குறைய 60 டிகிரி கோணத்தில் கீழே பார்த்து முறைத்தாள்.


நான் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப முயன்றேன். பிடிக்கும் போது போக்கு காட்டி பின் வழுக்கும் சாரைப்பாம்பு போல, என்னை ஒரே ஒரு மைக்ரோ வினாடி தனது பார்வையால் தீண்டி விட்டு வலப்பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் கூந்தல் மெல்ல என் கைகளின் மேல் உரசி விலகியது. அவற்றை லேசாக இழுத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உலவவிட்டபடியே மெல்ல தடவினேன்.


உங்களிடம் சொல்லி இருக்கிறேனா? பொதுவாகவே எனக்கு பெண்களிடம் ஈர்ப்பான விஷயம் கூந்தல் தான். புதிதாய் பிறந்த பூனைக்குட்டிக்கு மூன்றாம் வாரம் முளைக்கும் மீசை போல அவ்வளவு மென்மையான முடி ஜில்லுக்கு.. அவள் தலையை கோதி விட்டு முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொர்க்கத்தில் இப்படித்தான் வாசனை அடிக்கும் என மனப்பூர்வமாக நம்பி வந்திருக்கிறேன்.


அடர்த்தியான கருப்பில் லேசான பழுப்பு தூவிய நிறம். அவளிடம் நான் விழுந்ததே அந்த மசுருக்காத்தான் என பல முறை சொல்லியிருக்கிறேன். அவளுக்கு "மயிர்" என்ற வார்த்தை பிடிக்காது. கிடக்கட்டும். என்ன என்றேன். இது F1 ட்ராக்காடா என்றாள் தனது செந்நிற வானவில்லை சுட்டினாள். யாரோ மொழிபெயர்த்து படித்துக்காட்டியிருக்கிறார்கள். தமிழை பொறுமையாய் எழுத்துக்கூட்டி படிக்கும் ஜாதியில்லை அவள்.


சிரித்தபடியே இன்னமும் என்னென்னவோ சொல்லலாமே என்றேன். ஏவாளின் புருவம், மாலை பீடித்த ஆறாம் விநாடி இளம் ஆரஞ்சில் தென்படும் மூன்றாம் பிறை நிலா....


ஸ்ஸ் நிறுத்து என்றாள்.


இதழோரம் புன்னகையை தேக்கியபடி, அவள் விழி முயல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணின் குழிக்குள்ளிருந்து தப்பிக்க வழி தேடுவது போல அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் தலையை குனிந்த படி ஏதோ முணுமுணுத்தாள்.


சிரித்தபடியே யாரேனும் கவனிக்கிறார்களா என சுற்றிலும் லேசாக தலையை திருப்பி, இமையை முழுவதாக கீழிறக்கி மீண்டும் திறக்கையில் விழியை மறுபுறம் கொண்டு சென்று பார்த்தேன். அங்குமிங்குமாக சிலர் அரைப்பார்வையும் முழு கவனத்தையும் என் மீது வைத்துக்கொண்டிருந்தார்கள்.


சட்டென கன்னத்தில் ஏதோ பாதி வெட்டிய ஸ்ட்ராபெரி பழமொன்று உரசினாற் போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கம்பளம் விரிக்கப்பட்ட தரை ஏசியில் விரைத்து கிடந்தது. ஜில்லு தென்படவில்லை.


#ஜில்_கதைகள் ‪#‎ஜில்_கதை_2‬ ‪#‎தொடரும்‬

ஜில் கதைகள் - 1

https://www.facebook.com/SHAN4Luv/posts/859717640708121

இன்று காலை அலுவலக மிஷினில் காபி பிடித்து காலை உணவை முடிக்கலாமென சக்கரை பாக்கெட்டை பிரித்து கோப்பையில் கொட்டிக்கொண்டிருந்தேன். ஜில் திடீரென எங்கிருந்தோ முளைத்து எனக்கும் மெஷினுக்குமான இடைவெளியை விண்வெளியாக்கியடி நின்றாள்.


கண்களில் நிஜக்கோபம். உதடு லேசாக சுழித்திருந்தாள். அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஜில்லு உன் கோபம் தான் உன் பாவனைகளிலேயே செக்ஸியானது. அலுவலகத்தில் கோபப்படாதே, முத்தம் கூட தர முடியாமல் என் அவஸ்தை தாளது என்று. பெண்கள் என்றைக்கு என் பேச்சை கேட்டிருக்கிறார்கள். சரி, பொதுப்படுத்த வேண்டாம், ஜில்லு என்றைக்கும் கேட்டதில்லை.


மீண்டும் ஒரு முறை முன் விழுந்த முடியை கோதி, தனது எஃப். ஒன் சர்க்க்யூட் வளைவுகளில் இரு கைகளையும் வைத்து முறைப்பு மாறாமல் நின்றாள். எனக்கு புரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் எங்கேயோ வைத்து, விரலிடுக்கில் சிகரட்டோடொ, முகமருகே புகை பாவவோ என்னை பார்த்திருக்கிறாள். ரெட் லைட் ஏரியா சென்றால் கூட சரி, சிகரெட் ஆகவே ஆகாது என்றிருக்கிறாள் ஒரு முறை.


"என்ன?"


"என்ன?"


"என்ன, சொல்லு"


"தம் அடிக்கறியா?"


"ம்ம்.."


"தைரியமா...ம்ம்ம்ங்கற"


"ம்ம்ம்..."


"இப்ப எதுக்கு இதெல்லாம்?"


"ம்ம்.."


"இப்ப மரியாதையா காரணம் சொல்லப்போறியா இல்லையா?"


"பெரிசா காரணம் எதுவும் இல்ல, அடிக்காம இருக்க" என்றேன்.


ஒரு நொடி விட்டத்தில் இருந்து தவறி விழுந்த பூனை போல் பார்த்தவள், ஒரு கெட்டவார்த்தையோடு சேர்த்து 'நான் இல்ல' என்பதையும் முணுமுணுத்துவிட்டு, கையிலிருந்த காபிக்கோப்பையை பிடுங்கி குப்பையில் எறிந்து விட்டுப்போனாள்.


சிரித்தபடியே மீண்டும் ஒரு பேப்பர் கப்பை எடுத்து சக்கரை நிரப்ப ஆரம்பித்தேன். அதில் ஏற்கன்வே சர்க்கரை இருந்தது


‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎தொடரும்‬

Monday, June 9, 2014

ட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்?

ட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்காவோடு லேசாக வழக்கம் போல சண்டை போட்டிருந்தேன். எதிர்வினை ஆற்றுபவர்களை பொதுவாக திட்டுவதற்கு. அவர்கள் இன்று ஒரு சுட்டியை பகிர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது "இப்ப என்ன என்ன செய்ய சொல்ற" என தம்பி மாதவன் ஸ்லாங்கில்.  அவசர அவசரமாய் இதை எழுதுகிறேன். படிக்கவும், வேலையும் தலைக்கு மேல் கிடக்கிறது.

ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல....  /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.

ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.

நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...

இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.

என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.

எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.

இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-(  ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.

தொடர்புடைய பதிவுகள் :

தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி


http://www.koothaadi.in/2013/01/blog-post_8.html

http://www.koothaadi.in/2013/02/blog-post_1259.html