Flipkart

Amazon

Amazon

Monday, June 9, 2014

ட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்?

ட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்காவோடு லேசாக வழக்கம் போல சண்டை போட்டிருந்தேன். எதிர்வினை ஆற்றுபவர்களை பொதுவாக திட்டுவதற்கு. அவர்கள் இன்று ஒரு சுட்டியை பகிர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது "இப்ப என்ன என்ன செய்ய சொல்ற" என தம்பி மாதவன் ஸ்லாங்கில்.  அவசர அவசரமாய் இதை எழுதுகிறேன். படிக்கவும், வேலையும் தலைக்கு மேல் கிடக்கிறது.

ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல....  /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.

ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.

நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...

இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.

என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.

எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.

இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-(  ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.

தொடர்புடைய பதிவுகள் :

தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி


http://www.koothaadi.in/2013/01/blog-post_8.html

http://www.koothaadi.in/2013/02/blog-post_1259.html

1 comment:

  1. கிடைக்கிற கேப்ல எல்லாம் சிக்ஸர் அடிக்கிறியே சிவாஜி..

    தட் ஊரு ரெண்டு பட்டுட்டுச்சு மொமெண்ட்

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..