Flipkart

Amazon

Amazon

Saturday, June 15, 2013

ரஜினி : மற்றுமொரு பக்கம் - 7


            வசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடிகைகள் தனக்கு அம்மாவை நடிக்க இன்றும் யூத்தாக நடித்துக்கொண்டிருப்பவர் - தமிழகத்தின் அப்பழுக்கற்ற ஹீரோ என்ற பிம்பம் உடையவர் - வாய்ஸ் உடையவர் - பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட - அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் - அதற்கும் மேலானவர் - ஆதர்சம் - ரஜினிக்குண்டான பிம்பம் பிரம்மாண்டமானது.

             ரஜினி எப்படி இந்த இடத்தை பிடித்தார்.  எண்பதுகளில் ரஜினி படம் வந்து தான் ரஜினிப்படத்தை தியேட்டரை விட்டு தூக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எல்லாமே சூப்பர் ஹிட் என சொல்லிவிட முடியாமல் இருந்தது. 1980ஐ எடுத்துக்கொள்வோம். 79இல் வந்த அன்னை ஓர் ஆலயம் சூப்பர் ஹிட். 1980இன் ஆரம்பத்தில் வந்த பில்லா ப்ளாக்பஸ்டர், ஆனால் அதை தொடர்ந்த காலி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி எல்லாம் வந்த வேகத்தில் சுருங்கின, மீண்டும் பொல்லாதவன் ஹிட், முரட்டுக்காளை ஹிட். இங்கே ப்ளாப் ஆன படங்களை மக்கள் நினைவே வைத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

        ஒரு வருடத்திற்கு ரஜினி நாலு ஹிட் கொடுக்கிறார் என்பதே பேச்சு, அவர் எத்தனை நடித்தால் என்ன? ரஜினி மிக வேகமாக பி,சி சென்ட்டர்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்து நின்றார். ஏ க்ளாஸ் ரசிகர்கள் அவர் படத்தை இப்போது ரசிக்கத்துவங்கி இருந்தனர். தளபதிக்கு பிறகு ரஜினி க்ராபில் ஏற்றம் தான். இப்போது தான் ரஜினியின் படங்களில் ஒரு சின்ன மாற்றம் வருகிறது. தளபதி, ராபின் ஹுட், உழைப்பாளி என ரஜினி ஏற்று நடித்த பல வேடங்கள் ஏழை வேஷம். தங்களுள் ஒருவராக ரஜினியை கொண்டாட வைத்தது இது தான். நம் மக்கள் சினிமா முட்டாள்கள் இதற்கு வகைதொகையே கிடையாது. எம்.ஜி.ஆர் சாக மாட்டான் என நம்புபவனுக்கும், ரஜினி வாய்ஸ் சரியாய் இருக்கும் என எண்ணுபவனுக்கும், விஜயால் நாடாள முடியும் என நம்புபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.



             எங்கே விட்டேன், ம்ம்... பாஷா, பாஷாவிற்கு பிறகான படங்களில் ரஜினி பணக்காரனாக நடிக்க ஆரம்பித்தார்.  ஏழைகளால், கூட இருக்கும் துரோகிகளால் (இவர்கள் ஏழையாக அண்டிப்பிழைப்பவர்களாக இருப்பார்கள்) வஞ்சிக்கப்படும் ஹீரோ. முத்து படத்தில் பணக்காரராக இருந்தும் வேலைக்காரனாக, அருணாசலத்திலும் அப்படியே, படையப்பாவிலும் தன் சொத்து மணிவண்ணனால் ஏய்க்கப்படும்.

         ரஜினிக்கு ஏற்கனவே ஒரு இமேஜ் உண்டு. அவரது கேரக்டர்கள் பல நேரம் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் (பக்தியாம்), பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும், அநியாயம் என பொதுபுத்தியில் அமையப்பெற்றிருக்கும் எதையாவது கண்டால் பொங்கும், மற்றபடி பொதுபுத்தியை அப்படியே பின்பற்றும். படையப்பாவில் பாம்பை காப்பாற்றும், சாமி கும்பிடும், திமிர் பிடித்த பெண்ணை விரும்பாத, அம்மா சொன்னால் அதை செய்யும் பையன் (உஷ்ஷ்.... இதெல்லாம்).  பொதுபுத்தியில் நல்ல பையன் என இப்படிப்பட்ட பையங்களைத்தான் சொல்வார்கள்.

        என்பதுகளில் ரஜினியின் ரசிகனாய் இருந்தவர்கள் இப்போது தங்கள் மகன்கள் ரஜினியின் ரசிகனாய் இருப்பதற்கு தடையேதும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ரஜினி தான் Controversialஆக ஒன்றுமே சொல்லவில்லையே, அரைத்த மாவையே தானே அரைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தச் சமூகம் எப்படி உள்ளதோ ஆணாதிக்கம் (பொம்பள பொம்பளையா இருக்கணும் - படையப்பா, மன்னன்), சாதீய இறுக்கங்கள் (எந்தப்படத்திலாவது ரஜினி வேற்று/தாழ்ந்த சாதி பெண்ணை மணப்பதாக குறியீடு இருந்தால் சொல்லுங்கள்), என அத்தனையும் ஏற்றுக்கொண்டும் சிபிட்சத்தை கடைசியில் தரும் ஒரு பாத்திரமாக இருக்கும் ரஜினியினுடையது.

                           இதெல்லாம் வெறும் குறியீடுகளே. இதெல்லாம் நல்லது தானேப்பா என்றேர்களேயானால் உங்களை வெள்ளந்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி... சிவாஜியில் தமிழ் காலாச்சார் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லை) பெண் வேண்டும் என்பார் ரசிநீ (Back sorry Post mordernism) ஸ்ரேயாவை கோவிலில் பார்ப்பார். நல்ல விஷயம் என்றார் நண்பர். வாருய்யா என அமர்த்தி ஒரு கூடை சன்லைட் பாட்டை ஸ்லோ மோஷனின் ஓடவிட்டேன், வெள்ளையாய் ஒரு திராவகம் ஒழுக (வாயிலிருந்தய்யா) ரசித்து பார்த்தார். அப்பறம் திரும்பி  இளித்தார். ரஜினி சங்கர் போன்றவர்களின் டெம்ப்ளேட் ரொம்ப எளிது, இச்சமூகத்தில் எதையும் சீர்திருத்தாக, எந்த கருத்தையும் ஆழமாய் முன் வைக்காத, ஆனால் அதே நேரத்தில் சமூகத்தை சுபிட்சமடைய வைக்கும் ஒரு ஹீரோ + அடக்க ஒடுக்கமான அவன் காதலி பாடலில் மட்டும் கவர்ச்சி காட்டுவாள் + நினைத்ததையே சொல்லும் அம்மா, அவள் பேச்சை கேட்டு நடக்கும் நல்ல பையன் ஹீரோ.

             இது தான் ரஜினியின் வெற்றி பார்முலா. இச்சமூகத்தின் மொத்த Envisageஐ பட ஹீரோ செய்வார். வெல்வார். ரஜினிக்கு ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான். இதே காலகட்டத்தில் கமல் பரீச்சை செய்தார், ரிஸ்க் எடுத்தார். அவரை ஏன் பலரும் பரிந்துரைப்பதில்லை? உங்களுக்கே தெரியும் இருப்பினும் விரிவாக அலசலாம். அடுத்த மற்றுமொரு பக்கத்தில் :)

       

2 comments:

  1. intha comment eluthinavanavan kena pundai dai kurutu ku avaru yarunu theriuma manitha kadavul do loosu ku

    ReplyDelete
    Replies
    1. டேய் லூசுக்கூ.. அது கமெண்ட் இல்ல டா போஸ்ட்டு :-)

      Delete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..