Flipkart

Amazon

Amazon

Thursday, September 1, 2011

Random கிறுக்கல்கள்

இதையெல்லாம் அப்பப்ப ட்விட்டர் போடலாம்ன்னு இருந்தேன்.நிறையா வந்ததால ப்ளாக் :)



இங்க தான் ஆரம்பிச்சேன்


 SHAN - கூத்தாடி 


எல்லா காதலிகளும் தேவதைகளாம்
உன்னை பார்க்கவில்லை கவிஞர்கள்,
ராட்சஷி.

வலிக்கிறது,உன்னை அடித்த
பின் கண்ணீரை துடைக்கும்
 கை.

உன் இமைகள் பிரியும் நிகழ்வைக்
காண அதிகாலையிலும் பதட்டதோடு
காத்திருக்கின்றன என் விழிகள்.

எல்லா சாலைகளிலும் உன்
கால்தடம் கண்டுபிடித்து நடக்க
எத்தனிப்பாதலோ என்னவோ
அடிக்கடி விழுந்து விடுகிறேன்.

 நீ கோபாமாய் திட்டும்
போதெல்லாம் உன் கண்கள்
கெஞ்சுகின்றன
"மன்னிப்பு கேட்டு தொலையேண்டா"

நீ போடா என் சிணுங்கும்
போதெல்லாம் உன் கைகள்
தானாய் என்னை நோக்கி
நீளுகின்றன.

நீ தூங்கும் வரை நானும்
காத்திருக்க வேண்டி இருக்கிறது.
முதலில் கண்களில் இருந்து
கழட்டி வை அந்த நிலவை.

சை,இன்றும் மறந்து விட்டேன்,
நீ கோபப்பட்டால் எதிர்த்து
கோபப்பட வேண்டும் என நினைத்திருந்தேன்.

என் அலைபேசியின் எல்லா
சிணுங்கள்களிலும் உன் குறுஞ்செய்தியின்
வாசனை.





1 comment:

  1. நல்ல ஒரு முயற்சி .வாழ்த்துக்கள் சகோ ....

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..