Flipkart

Amazon

Amazon

Wednesday, May 8, 2013

ஸ்ருதிஹாசன் - Maxim : மற்றுமொரு பக்கம் - 6


18+ - படத்தை மட்டும் பார்த்துவிட்டு லைக்கை அமுக்கி தொலைக்காதீர்கள் :


 இப்போது தான் கமல் முத்த விவகாரம் குறித்து எழுதுகையில் ஸ்ருதி குறித்து குறிப்பிட்டேன். மீண்டும், ஸ்ருதியை பற்றி எழுத வேண்டி வந்திருக்கிறது. எனக்கும் உனக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது செல்லம். பார்த்துக்கொள்வோம். சரி, உனக்கு ஒன்றே ஒன்றை சொல்ல விரும்பினேன். இது குறித்து  பழுத்த அனுபவம் வாய்ந்த நண்பர் ஒருவரோடு உரையாடுகையில் ஒத்திசைவுள்ள கருத்து ஒன்று உருவானது. எங்கள் இருவருக்குமே இப்படி நேரடியான முகத்திலடித்தாற்போலான கவர்ச்சி பிடிக்கவில்லை. கவர்ச்சியின் அழகே கொஞ்சம் மறைத்து கொஞ்சம் காட்டுவது தான். அதை கொஞ்சம் கவனித்தால் நலம்.




                 மேக்சிம் இதழில் ஸ்ருதி இருப்பது போல வந்த ஸ்டில் உண்மையா உடான்ஸா என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்க மேக்சிம் அதிபரை தொடர்பு கொண்ட போது, அவரது அழகான செக்ரட்ரி எடுத்தார். (போனை) பேசிக்கொண்டே இருந்த போது, படுபாவி ஏர்டெல்காரன், காசு இல்லன்னு கட் பண்ணி உட்டுட்டான். மேக்சிம் இதழை அவ்வப்போது இணையத்தின் மூலம் காண்பவன் (கவனிக்க வாசித்தவன் அல்ல) என்ற முறையில் அது உண்மை என்றே தோன்றுகிறது. ஓக்கே, சீரியஸ் மோடுக்கு வருவோம்.

                  இதற்கிடையே இணைய வெளியில் வலம் வந்ததில், ஸ்ருதியின் படங்கள், வேறு எதற்கோ எடுக்கப்பட்ட ஸ்டில்கள் போல தெரிகிறது. இதனிடையே, MAXIM ஸ்டில்கள் பேஸ்புக்கில் எங்கு வெளியானாலும் அங்கு சென்று ஒரு க்ரூப் சென்று "அய்யகோ கமல் மகளா இப்படி" "இந்திய கலாச்சாரம் இழவு கொட்டுகிறதே" என மானாவாரியாக கமெண்டுகிறாரக்ள். பார்க்கவே பரிதபமாய் இருக்கிறது.

                      சில நாட்கள் முன்பு, நண்பர் ஒருவர் பூனம் பாண்டேவோ, சன்னி லியோனோ நினைவில்லை. அவர்களின், சின்ன வயசு போட்டோ என்று ஒரு படத்தை பகிர்ந்து அதனோடு இப்படி மானத்தை கெடுத்துக்கொண்டு வாழ்வோம் என அந்தப்பெண் அந்த வயதில் எதிர்பார்த்திருப்பாளா? எல்லா உயிரும் கவுரவமாகவே வாழ விரும்புகிறது என பதிவிட்டு இருந்தார்.

                   எனக்கு உண்மையிலேயே இது குறித்து எழுத எரிச்சலாய் இருக்கிறது ஐயா. ஆறு மாசம் இருக்கும். கி.ராவின் பேட்டி ஒன்று ஆ.வியில் வெளியானது. நினைவிருக்கிறதா? "எப்பப்பாத்தாலும் அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தா அது வியாதி இல்லாம வேறென்ன?" என கேட்டிருப்பார் கி.ரா. பாக்கியராஜிடம்  "ஏன் முருங்கக்காய் மேட்டர்களை தொடுகிறீர்கள்" என எப்போது கேட்டாலும் சொல்வார், "அட, எத மறைச்சு மறைச்சு வெக்குறமோ, அதுல தானங்க சுவாரசியம் ஜாஸ்தி".

                  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் கவலை சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா என்பது தான் என்பது உங்களுக்கு தெரியுமா? கூகுள் தேடலில் Mastrubation and impotency என்ற வார்த்தைகள் எத்தனை முறை இந்தியாவில் தேடப்பட்டுள்ளது என அறிவீர்களா?

                    விஷயத்திற்கு வருகிறேன். மொத்தமாய் ஸ்ருதி மேட்டரிலும், மற்ற கலாச்சாரத்தை கெடுக்கும் பார்த்து புலம்புபவர்களுக்கு பொதுவாய் ஒன்ற் சொல்கிறேன்.  காண்பிப்பது அவர்கள் உரிமை. புடிச்சிருந்தா பாருங்க. இல்ல நான் ஒழுக்க சீலர்ன்னா, ஸ்ரோல் பண்ணி போய்கிட்டே இருங்க, Family Safety ஆப்ஷன் Enable பண்ணி வெச்சுக்குங்க.



                       ஸ்ருதி மேட்டரில் புலம்புபவர்கள் இரண்டு ரகம். 1. கமல் பெண்ணாச்சே என புலம்புபவர்கள். 2. இந்திய கலாச்சாரம் இஸ்துகுச்சே என கூவுபவர்கள். முதலாம் ரகத்தினருக்கு ஒரே பதில் தான், "இது சப்ப மேட்டருங்க. கமல் கிட்ட கேட்டா கூட இதத்தான் அவர் சொல்வார். ஸ்ருதி என்ன செய்யவும் கமலின் அனுமதி தேவையில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்க அவருக்கு அனுமதி உண்டு." இந்த வாதத்தை நியாப்படுத்த என்னிடம் காரணம் உண்டு. ஒரு பேட்டியில் Sharon Stone Basic Instictஇல் நடித்ததை போல நடிப்பீர்களா என ஸ்ருதியிடம் கேட்டதற்கு அவர் கமல் முன்னிலையிலேயே "ஓ! யெஸ்" என்றார். கமலும் அதை ஆமோதிக்கவே செய்தார்.

               
                     இரண்டாவது ரகத்திற்கு வருவோம்.  ஒரு உளவியல் தியரி இருக்கிறது, சத்தம் போட்டு பேசுபவர்களின் பக்கம் பெரும்பாலும் நியாயம் இருக்காது. இந்த ஒழுக்கவியாதிகள் இப்படி பேச காரணம் "இதோ பாருங்கள், எல்லோரும் தப்பு செய்கிறார்கள். அய்யோ, என்னை விட அதிகமாய் செய்கிறார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் நான் செய்த தப்பு ஒண்ணுமே இல்லை. நான் இவர்களை விட நல்லவன்" என காண்பித்துக்கொள்ளத் தான். இன்னொரு படம் பார்த்தேன், பிஜேபி பார்னை பேன் செய்யச் சொல்லி கையெழுத்து இயக்கம் நடத்துகிறதாம். பார்னை பேன் செய்வது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், முதலில் அதை பாராளுமன்றத்தில் செய்ய வேண்டும் போலிருக்கிறதே! ஒரு கோட்டின் அருகில் பெரிய கோடை வரைந்து முந்தைய கோடை சிறிதாக்கும் அதே டெக்னிக். என்னைய விட அவன் கெட்டவன்! இந்த  நல்ல பெயர் இங்கு எல்லோருக்கும் முக்கியமாய் படுகிறது. வள்ளுவரே காமத்துப்பால் எழுதிய பின்பும், காமசூத்ரா எழுதிய காமத்தை ரகசியமாய் வைத்து இளைஞர்களை காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

                       மேக்சிம் போன்ற இதழ்கள் பெண்களை பொருளாக, உடைமையாக்க எடுத்துக்கொள்ளும் அதே சிரத்தையை Chasity என்ற பெயரில் இந்த பொங்குபவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்.

                              உங்களில் எத்தனை பேர் பெண்களை அல்லது அழகையே ரசிக்காதவர்கள்? மனைவியை தவிர மற்ற பெண்களை, காமமற்ற தோழியாகவோ, தங்கையாகவோ, தாயாகவோ பார்ப்பவர்கள்?? பார்ன் பாக்காதவர்கள்? ஏதோ ஒரு பெயர் தெரியாத பெண்ணை கண்களால் புணராதவர்கள்? இதோ இப்போதே உடலை காட்டிவிட்டாள் என்பதற்காக ஒரு நடிகையை "தே..." என வார்த்தையால் வன்புணர்ந்திருப்பீர்களே? இரண்டாம் ஜாமத்தில் உழைத்து பணி முடித்து செல்லும் பெண்ணை "இவல்லாம்" என கமெண்ட்டே நீங்கள் அடித்ததில்லையா நியாயமாரே?  குழந்தைக்கு பால் வாங்க  நூறு இரு நூறுக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் சாலையோர வனிதையரை பார்த்தும் பார்க்காமல் தானே கடந்து போகிறீர்கள்??  எல்லாம் கிடக்கட்டும் தலைவலி என ஒதுங்கும் மனைவியை இழுத்து புணராதவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள் பார்ப்போம்?

                             மானம் குறித்து முன்பு சொன்னேனே, அந்த சன்னி லியோன் போட்டோ. அதற்கிட்ட பின்னூட்டம் தான் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லவிரும்புவது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஏதோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு போல் ஆகிவிட்டது. உழைப்பவர்களை ஏய்ப்பத்தை எல்லா மட்டங்களிலும் நாம் நிகழ்த்தி வருகிறோம். லஞ்சம் கொடுப்பதற்கு உங்களுக்கு கூசாத போது, சாதி சாயத்தை உடல் முழுக்க பூசிக்கொள்ள உங்களுக்கு கூசாத போது, உடலை காட்டி நடிப்பது கேவலமான பிழைப்பு கிடையாது ஐயா. விபச்சாரி கூட உழைப்புக்கு ஊதியம் வாங்கும் போது, ஊதியம் போக லஞ்சம் வாங்க, கடமையை மீறும் அல்லது, அதை ஊக்கவிக்கும் நம்மை விட ஸ்ருதியும், பூனம் பாண்டேவும், சன்னி லியோனும் ஆயிரம் மடங்கு நேர்மையானவர்கள், நல்லவர்கள் தாம்!

  பின் குறிப்பு : அழகை ரசியுங்கள். இது அழகல்ல, ஆபாசம் எனில் தவிர்த்து விட்டு செல்லுங்கள். நீங்கள் புலம்ப, புலம்ப இது என்ன மேட்டர்ன்னு தெரியாவதவன் கூட வந்து பாப்பான். உங்க பிரச்சனை அந்த பொண்ணு காட்றதா? இல்ல பசங்க பாக்குறதா?
                           

                   


                   

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..