ஆனாலும், சமீபத்தில் சட்டீஸ்கரிலும் அதற்கு முன்னரும் நிகழ்த்தப்பட்ட கொலைகளும் நக்சல்கள்/மாவோக்களின் வன்முறை பாதையும் எந்தளவு சரி என்ற கேள்வி என்னிடமும் ஏனைய பலரிடமும் பல இடங்களில் முன்வைக்கப்படுகிறது.
முதலில் ஒரு இளம் பெண்ணோ அல்லது வாலிபனோ வெறும் மூளைச்சலவைக்கு ஆட்படுதப்பட்டு தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று உங்களால் மனதார நம்ப முடிகிறதா? உங்கள் மகனையோ மகளையோ அப்படி மூளைச்சலவை செய்துவிட முடியுமா? முடியாதல்லவா? நக்சல்களாக உருவெடுக்கும் பெரும்பாலானோருக்கு தனித்தனியாக காரணங்கள், கதைகள், சோகங்கள் இருக்கின்றன. கண்ணுக்கு முன்னால் இரத்த பந்தம் உள்ள பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பார், ஏன் அது தாயாக கூட இருக்கலாம். ஒரே வாழ்வாதாரமான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கும்.
அவர்கள் மண்ணின் வளத்தை சுரண்டிக்கொண்டு அவர்களை ஏய்த்துக்கொண்டிருப்போம். உள் நாட்டு தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது அவர்களை அழித்தல் அல்ல, அந்த தீவிரவாதத்திற்கான காரணத்தை அழித்தல். மாவோக்களை விஷயத்தை பொறுத்தவரை, காரணம் நமது கேவலமான நிர்வாகம், அரசாங்கள், பாதுகாப்புப் படை. போலீஸ்காரர்களே பெண்களை கற்பழிக்கும் ஊரில் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?
இன்னொரு வாதத்தின் படி இவ்வாறான வன்முறை மீண்டும் நக்சல்கள் மீதான அரசின் கொள்கையை இறுக்கி அவர்களுக்கு பாதகமாக அமையாதா? என்பது. அமைதிப்பாதையில், ஜன நாயக வழியில் போராடலாமே என்பது.
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். அமைதி வழியில் போராடிக்கொண்டிருக்கும் ஐரோம் சர்மிளையும், உதயகுமாரையும் இந்த அரசு எப்படி நடத்துகிறது? இதைப்பார்க்கும் யாரால் இந்தியாவில் ஜனநாயக பாதையில் நம்பிக்கை வைக்க முடியும்? இக்கட்டுரையில் எவ்விதத்திலும் மாவோக்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. நம் அரசு செய்வது தவறு என்கிறேன். கிளைகளை வெட்டாதீர்கள் ஐயா. வேர்களை வெட்டுங்கள். இங்கு கிளைகள் மாவோக்கள், வேர் உங்கள் புழுப்பிடித்த அரசு கட்டமைப்பும் அதன் செயல்களும்.
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..