Flipkart

Amazon

Amazon

Tuesday, October 28, 2014

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

1 comment:

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..