Flipkart

Amazon

Amazon

Sunday, August 14, 2011

எங்கே தோற்றோம்? - இது கம்யூனிஸமா?

இந்த பதிவுக்கு முன் இந்த விளக்கங்கள் அவசியம் என்பதால்.இன்று பகல் முழுக்க நண்பர்களுடன் கழிந்தது.மாலை 5 மணி அளவில் நூலகம் செல்ல முடிவேடுத்தேன்,கூடவே சிறூ வயது முதல் பழகி வரும் ஒரு ஏரியா நண்பன்,என்ன்னை விட ஒரு வயது சிறியவன் ஆதலால் என்னை அண்ணா என்று அழைப்பது வழக்கம்.நாங்கள் பைக்கில் கிளம்பினோம்.அம்மா கொடுத்த தேனீர் இன்னும் அடி நாக்கில் இருந்தது,தண்ணீர் குடித்திருக்கலாம்,அவரசரம்.

 நூலகத்தோடு எனது தொடர்பு அலாதியானது.சிறு வயது முதல் நண்பர்கள் அதிகம் என்றாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க பழகிக்கொண்டு இருந்தேன்.4ஆம் வகுப்பு முதல் நானே நூலகம் சென்று புத்தகம் தேடுவேன்.இப்போது நினைக்கையில் பெரிய விஷயமாக படுகிறது.கிட்டத்திட்ட இரண்டு மணி   நேரம் புத்தகம் தேடவே சென்றது.பெரியார் புத்தகம் ஒன்றும்,லெனின் மற்றும் சே குவேரா பற்றிய நூல்கலும் எடுத்து வந்தேன்.

இப்போது எனது பால்ய பருவம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நாத்திக சிந்தனை எனக்குள் தலை தூக்க தொடங்கிய நேரம் 7ஆம் வகுப்பு என நினைக்கிறேன், இப்பொழுது தொடர்பில் இல்லாத சில நண்பர்கள் கிடத்த நேரம்.ராஜா,யுவராஜ்,கௌதம் இதி குறிப்பிடத்தக்கவர்கள். ராஜா பார்க்க ஒல்லியாக இருப்பாம்,காதல் கொண்டேன் தனுஷ்  போல என வைத்துக்கொள்ளுங்கள்.மற்றவர்களை பற்றி அவ்வளவு தேவை இல்லை.
எனக்கு பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக் கோள்ளும் சுதந்திரம் இருந்ததால் இவர்களுடன் பழக நேரிட்டது. பெட் கட்டி கேரம்,கிரிக்கெட் ஆடும் போது ஏற்ப்பட்ட பழக்கம், நாளடைவில் சந்தித்தல் குறைந்து விட்டது, ஒரே ஏரியாவில் இருந்தாலும் (4 தெருக்களுக்குள்). யுவாராஜ் இவர்களுடன் இருந்து விலகி இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாமல் இப்பொது தான் +2 தேறினான் என கேள்விப்பட்டேன்.


நாங்கள் நூல்கள் எடுத்து முடித்துவிட்டு வெளியேறினோம்,மேலும் சில பொருடகளை ஒரு கார்ப்பரேட் கடையில் வாங்கி பரிச்சியமான தெருவுக்கு வரும் போது மணி 8ஐ நெருங்கி விட்டு இருந்தது.எங்கள் ஏரியாவுக்கு வந்த உடன் தெரிந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் ஒரு கம்யூ., அலுவலகம் (திருப்பூர் சிகப்பு தொழிலாளர்கள் நிறைந்த நகரம்). ஒருவன் குழறியபடி அந்த மருந்தக (அங்கே தான் ரீ-சார்ஜி செய்வேன்) ஓனரிடன் வாதாடி கொண்டு இருந்தான். கண்களை இடுக்கினேன், இவன் இவன் ராஜா, ஆளே மாறி விட்டு இருந்தான், உடம்பு முழுக்க ஒல்லியானாலும் தொப்பை போட்டு இருந்தான், உதடு கருத்து இருந்தது,கால்கள் முழு அழுக்கு ஏன் என தெரியவில்லை.

இன்னமும் குழறிக்கொண்டு இருந்தான் (வார்த்தை தெளிவாக இருந்தது ஆனால் அர்த்தம் சம்பந்தம் இல்லாததாக இருந்தது).



"யேய் ஊறுக குட்றா...." என்றான். "மாப்ள நல்லா இருக்கியாடா" என்றேன்.

சிறிது நேரம் என்னை வினோதமாக பார்த்தவன் தோளை பிடித்து :டேய் தம்பி நல்லா இருக்கியா டா?" என்றான்.(நானும் அவனும் சம வயதே).

 "ஹ்ம்ம்: என்றேன் கிளம்பியபடி.

என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடித்தான், "வசதியா மாப்ள" என்றான்.(தம்பி போய் விட்டிருந்தது).

"டேய்... இத போட்டு இருந்தா வசதி யா.. கவரிங் டா வேணும்ம்ன்னா எடுத்துக்கோ" -இது நான்

"வேணாம் மாப்ள.. அப்பறம் என்ன பண்ற?"

"இஞ்சினியரிங்க் டா..த்தேர்ட் இயர்.."

"அட நம்ம பையன் ஒருத்தன் கூட... (அந்த பக்கம் இருந்த ஒருவனிடம் கேட்டான் "மச்சான்.. அந்த க்**** பேரு என்ன?") ம்ம் ***** கூட இஞ்சினியரிங்க் தாண்டா படிக்கறான்"

"ஹ்ம்ம்..."

"காலேஜ்ஜுல கெத்தா இருக்கியா டா?"

"ஹ்ம்ம்..ஏதோ மாப்ள சரி நான் கிளம்பறேன்"

"இரு டா.... போன  வாரம் அவன் காலேஜ்ஜுக்கு போனோம், சரக்கு அடிச்சிட்டு தான்.. 3 இழுப்பு (போதைப் பொரும் என பின்பு புரிந்தது) இழுத்துட்டு போய் சரி ஆட்டம்.. எவனோ இவன் ஆளுக்கு நூல் விட்டு இருக்கான்.. பிரிச்சுட்டோம்.. அவனுக்கு 12 தையலாம்...."

"ஓ..."

"சொல்லு மாப்ள... எவனையாது தூக்குனா தான் நம்ம மேல மரியா....(தள்ளாடினான்...ஓரமாக சென்று வாந்தி எடுத்தான்)"

3 நிமிடம் கழித்து  

"சொல்லு மாப்ள உங்க காலேஜ்ல எவனையாவது தூக்கலாம்..சரக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிரு..."

 நான் -  "ப்ரச்சனை எதும் வர்லியா...அந்த 12 தையல் கேஸ் எதும்?"

"அதான் அண்ணன் இருக்கருல்ல" - கூட இருந்தவன் கம்யூ., அலுவலகத்தில் இருந்த ஒருவனை காட்டி சொன்னான்.35 வயதிருக்கும் அந்த நிமிடம் ஜீன்ஸ் -டீ சர்ட்டில் இருந்தால், டேபிளில் இருந்த கண்ணாடிக்கு அடியில் ஒரு பழைய போட்டோவில் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தான்.கை கொடுத்துக் கொண்டோம்,அவனும் நிதானத்தில் இல்லை.

"என் நம்பர் நோட் பண்ணிக்க" என்றான்.

என் Galaxy ஐ வாங்கி சிறிது நேரம் பார்த்துவிட்டு தந்தான். என் கூட இருந்த நண்பன் கையில் இருந்த புத்தகங்களை பார்த்தான்,தட்டு தடுமாறி படித்தவனுக்கு அதன் பெயர்களை சொன்னேன்..

"யார் இவனுங்க..."

"டேய் லெனின்..மார்க்ஸ் டா... இந்த கம்யூனிச கொள்கைகளின் தந்தை டா..." என்றேன்.

"நீயும் கட்சில இருக்கியா..சொல்லு அண்ணன் நினைச்சா நீயும் இந்த வாட்டி க்வுன்சிலர்"

எனக்கு அதை தூக்கி தலையில் அடித்துக்கொள்வது என தெரியவில்லை.

அண்ணனிடம் கேட்டேன் "உங்களுக்கு இவங்களை தெரியுமா?"

அண்ணன் " பொலி பீரோ ஆளுங்க தான...எத்தன தடவ கூட்டத்துல இவங்க கூட பேசியிருக்கேன்..தெய்யுமான்னு கேக்குற" என காலரை தூக்கினான்.
கூட வந்தவன் முதுகில் நிமிண்ட புரிந்து கொண்டு ஒரு வழியாக கிளம்பினோம்.

நாம் எங்கே தோற்றிருக்கிறோம்? புரிகிறதா?

எனிவே, ஹாப்பி இண்டிபெண்டென்ஸ் டே

(இந்த பதிவில் சில பேச்சுக்கள் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவமாக இருந்தாலும் படைப்பாக கருதி மாற்றம் செய்ய எனக்கு முழு உரிமை உண்டு.இது யாரயும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல)

1 comment:

  1. அண்ணன் " பொலி பீரோ ஆளுங்க தான...எத்தன தடவ கூட்டத்துல இவங்க கூட பேசியிருக்கேன்..தெய்யுமான்னு கேக்குற" என காலரை தூக்கினான்.
    ____-
    அருமை!!!!!!!!!!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..