Flipkart

Amazon

Amazon

Sunday, March 3, 2013

மற்றுமொரு பக்கம் - புதிய பத்தி - அறிமுகம்

                      



       விஷுவல் மீடியத்தின் எழுச்சி எழுத்தின் முக்கியத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் குறைத்து வருகிறது. மனுஷ், சாரு போன்ற எழுத்தாளர்கள் கூட இ-புக் பக்கம் செல்வது போல தெரியும் போதெல்லாம், புது புத்தகத்தின் வாசம் மூச்சை நிறைத்து நெஞ்சை அடைக்கிறது.

                   விஷூவல் மீடியத்தின் பக்கம் செல்ல நண்பர்கள் முயற்சி எடுத்து, அது ஒரு பக்கம் நடந்து வந்தாலும், உள்ளே புழுக்கத்தில் ...
உழன்று கொண்டிருக்கும் எழுத்துக்காரணை, வாசிப்பு அனுபவந்த்தை நுகர்ந்தவனை சத்தமின்றி கொன்று விட முடியவில்லை. தன் கடைசி தபாலை விநியோகித்து விட்டு பணி ஓய்வு பெறும் தபால்காரனை போல, ஏக்கத்துடன் என் வளர்ச்சியை பார்க்கும் அவனை புறந்தள்ளி விட முடியவில்லை.

                     இன்னொரும் புறம் பதிவுலகம் மெல்ல கலகலத்துப்போய், பதிவுகள் வழக்கொழியும் என்ற நிலையில் முகநூலும் ட்விட்டரும் எழுத்துகளை கொஞ்சம் வாழ வைக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு
Parisalkaaran Krishna Kumar அண்ணனுக்கு வந்த வரவேற்பான ஷேர்கள் ஒரு சாட்சி.

                    இன்னுமொரு பக்கம், வருங்காலத்தில் வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் இணையத்தை மையமாக கொண்டே இயங்கும் என்ற அவதானிப்பு என்னுள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கதைகளும், தொடர்களும் முதலில் இணையத்திலும் பின் இதழ்களில் வரும் காலம் தொலைவில் இல்லை.

                        இவற்றை எல்லாம் தாண்டியும் என்னுள் இருக்கும் எழுத்துக்காரனுக்கு தீனி போடவும், இனி முக நூலை களமாக்கி, வார இதழ்களில் வெளிவருவது போல "பத்தி" எழுதலாம் என உத்தேசம்.

                         என் ஆசை நிறைவேறினால், இந்த பத்தியே கூட விரைவில் விகடனிலோ குங்குமத்திலோ வெளியாகலாம். (ம்ம்க்கும் என் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருந்தால் சற்று முன்பு சாட் செய்த ஃபேக் ஐடியோடு சேர்த்து எனக்கு 13439 பெண்டாட்டிகள் இருந்திருப்பார்கள்)

                            நிச்சயம் அந்த வாரத்தின் சென்ஷனலைஸ்டு நியூஸ் சொல்லி உங்களை அறுத்து விட மாட்டேன். நான் ஏறிவுடன் பெருந்துறைக்கு டிக்கெட் நீட்டும் எந்த பெயர் தெரியாத பேருந்து நடத்துனர், பத்து நாள் முன்பு இறந்து போன எங்கள் ஏரியா டெயய்லர் தாத்தா என முகம் தொலைத்த ம்அனிதர்களும் அவர்களின் சொல்லப்படாத கதைளும் ஏராளம் இருக்கின்றன.

                          என் பத்தியின் வரவேற்பு உங்கள் ஷேர்களின் மூலம் மட்டுமே என்னால் கணக்கிடப்படும். இதுவரை படிக்காதவர்கள் நிச்சயம் லைக் தான் செய்வீர்கள். ஆனால், அதனால் பயனில்லை. வெறும் ஷேரை மட்டுமே கணிக்கிடப்போகிறேன்.

                            இன்று முதல் ஒவ்வொரு வாரமும், என் முக நூல் பிரத்தியேக பக்கத்திலும் என் சுவற்றிலும், என் வலை மனையிலும்....

"மற்றுமொரு பக்கம்"


 http://www.facebook.com/matrumorupakkam#!/

பின் குறிப்பு : உங்கள் வரவேற்பை பெற்ற குப்பை தொடர் கட்டுரை தொகுப்புகள் நிச்சயம் தொடரும். இந்த "மற்றுமொரு பக்கம்" பத்தி, குறுந்தொகுப்பு, முக நூல் ஸ்பெஷல், இன்னமும் வாசிப்பை நேசிப்பர்களுக்கும் அதற்கும் நேரம் குறைவாக இருப்போர்க்கும் சென்று சேர்க்கும் தளம்.

 இலக்கியத்திற்கு முக நூல் சரிபட்டே வராது என்பது என் தனி எண்ணம். என்ன ஆகிறதென்று பார்ப்போமே.



No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..