Flipkart

Amazon

Amazon

Saturday, February 2, 2013

எனக்கு பவர் ஸ்டாரை பிடிக்காது!

         ஒரு காலத்தில் பவர் ஸ்டார் என கூகுளில் தேடினால் "பவன் கல்யாணின்" போட்டோக்கள் வந்துவிழும். தெலுங்கில் நீண்ட நாளாக அவர் தான் பவர் ஸ்டார். சிறிது காலம் முன்பு, தெலுங்கில் இப்படி ஒருவர் இருப்பது கூட தெரியாமல், தமிழ் படங்களின் ஒருவர் தலைகாட்டினார், தமிழ் படமென்றால், யாருமே பார்க்காத, அவர் மட்டுமே எடுத்து பார்க்கக்கூடிய படங்கள். அவர்...இவர்...



          பவர் ஸ்டாரை பற்றி நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என நினைத்திருந்த பதிவு இது. கண்ணா படம் வந்த போது எழுதினால் பத்தோடு பதினோன்றாக ஆகிவிடக்கூடும் என்பதாலும் நேரமின்மையாலும் இவ்வளவு லேட்.

      எனக்கு லட்டு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரிரு இடங்களைத்தவிர எங்குமே சிரிப்பு வரவில்லை. சுத்த அடாசு. ஆனாலும், படம் ஹிட். முன் பின் தெரியாத முதல் பட நடிகரை (லத்திகா எத்தனை பேர் பார்த்தீர்கள்??) கண்டவுடன் விசில் பறக்கிறது. ரஜினி, கமல் எல்லாம் அடைந்த கலை உச்சங்களை அவர் தொட்டுவிடவில்லை தான். ஆனால், இவர்களில் யாருக்கும் முதல் படத்தில் இப்படியொரு கைத்தட்டல் நிச்சயம் கிடைத்ததில்லை. எனக்கு பவர் ஸ்டாரையும் பிடிக்காது. அவருக்கென நடிப்போ, அதற்கேற்ற உடலசைவுகளொ வேறெதுவுமோ இல்லை. அவர் ஒரு "நடிகராக" ஜெயிக்கவில்லை. பிற்காலத்தில் அவர் நடிப்புத்திறமையை மெருகேற்றிக்கொள்ளவேண்டும் என ஜெமோ போன்ற  நிகழ் கால சினிமா கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்.

         பவர் ஸ்டார் அடைந்த உச்சம் குறித்தோ, அவரின் நிலை குறித்தோ எதுவும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால், பவரின் இன்றைய நிலை மிக முக்கியமான இரண்டு தரவுகளை நமக்கு உரக்கச்சொல்கிறது.

     ஒன்று இணையத்தின் வளர்ச்சி. ஒரு வேளை பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை இல்லாதிருந்தால் லத்திகாவோ, பவர் ஸ்டாரோ சுத்தமாக கவனிக்கப்படாமலேயே தான் போயிருப்பார்கள். தன்னை தானே ஹீரோ என்று அழைத்துக்கொண்டு இவர் செய்த காமெடிக்களுக்கென இவரை ஓட்ட ஒரு பட்டாளம் உருவானது. கிஞ்சித்தும் சீரியஸ்னெஸ் இன்றி இவர் சீரியஸாகவே பேசுவது போல பேசிக்கொண்டிருப்பதை கிண்டல் அடிக்க அதன் மூலம் தன் கெத்தை உயர்த்திக்கொள்ள என முக நூலில் ஸ்டேட்டஸுகள் பறந்தன. இதில் இரண்டு விதமான ஸ்டேட்டஸுகளை பார்க்க முடிந்தது. ஒன்று, இவன் யாரடா கோமாளி என ஏளனம் செய்யும் வண்ணம் ஆரம்பித்த ஸ்டேட்டஸுகள். இரண்டாவது, ரஜினி ஜோக்குகள் பாணியில் வஞ்சப்புகழ்ச்சிகள்.

உதாரணத்திற்கு ஒன்று,

பவர் ஸ்டார் ஒரு நாள் விமானத்தில் இருந்து தன் பர்ஸை கீழே விட்டுவிட்டார்,

ஸ்விஸ் பேங்க் உருவானது.

இது ஒரு பழைய ரஜினி ஜோக். பவர் ஸ்டாருக்காக தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டது. எப்போதுமே மனித மனம், தன்னை விட ஒருவனை கீழாக நினைக்க, அல்லக்கையாக பார்க்க, தான் ஓட்டினால் கேட்டு சகித்துக்கொள்ள ஒருவனை தேடுகிறது. சிக்கியவர் பவர் ஸ்டார். அது முக்கியமல்ல. இணையத்தின் வீச்சம் எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தீர்களா?


        இப்போஸ்டரை அடித்தவர்கள், இவரின் நடிப்புத்திறமையை பார்த்து ரசிகர்களானவர்களா?

   ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு, இணையத்தை வைத்து ஒரு புரட்சி உருவாவது (எகிப்து, துனிசியா, இரான் எலெக்ஷன்) போல நடக்குமா என்று கேட்காதீர்கள். ஒரு பொது மொழி வேண்டும் அதற்கு. அதற்கும் மேல் இப்படி ஒவ்வொருவருவரும் தனக்கென படித்தோ படிக்காமலோ தெரிந்தோ கேட்டோ வைத்திருக்கவேண்டுமே என ஒரு கருத்து வைத்திருக்கவும் கூடாது.

இரண்டாவது முக்கியமான விஷயம், இவர் வெற்றி பெற்ற வழி. உங்களுக்கு எதில் அதிக கூச்சம்? மேடையில் பேசுவதிலா? மனைவியின் அப்பாவோடு உரையாடுவதிலா? நடனமாடுவதிலா? மற்றவர்கள் முன் மனைவியை செல்லப்பெயர் சொல்லி அழைப்பதிலா? இப்படி நிச்சயமாக ஏதேனும் ஒரு கூச்சத்தால் நீங்கள் அவதிப்பட்டிருப்பீர்கள். யாராவது ஓட்டுவார்களோ என ஏதேனும் ஒரு விஷயத்தை நிச்சயம் செய்யாமல் விட்டிருப்பீர்கள்.

     ஆனால், எத்தனை பேர் அதை விடாப்பிடியாய் முயன்று இருக்கிறோம்? அதைத்தான் செய்தார் பவர் ஸ்டார். ஆங்கிலம் பழகும் ஒருத்தியை "பீட்டர் டா" நாம் கிண்டலடிப்பது போலத்தான் பவர் ஸ்டாரும் கிண்டலடிக்கப்பட்டார். ஆனால், இப்படி ஒரு மனிதன் சீரியஸான ஒரு முகமே இல்லாமல், நிஜ வாழ்க்கையில் கூட காமெடியாகவே வாழ்ந்துவிட முடியுமா என ஆச்சரிப்படும்படியாக இன்று வரை ஒரு இடத்தில் கூட எந்த வித எடக்குமடக்கான கேள்விகளுக்கும் கூட சிரித்த படியே பதில் அளிக்கிறார்.

      யாரோடு நடிக்க விருப்பம் என்றால் "ஐஸ்வர்யா" என்கிறார். ரஜினி எனக்கு போட்டி என்கிறார். நியாமாக கோபம் வர வேண்டிய நமக்கு சிரிப்பு வருகிறது. காரணம், சொல்லும் போது அவருடைய பாடி லேங்குவேஜ் அப்படி. அது ஒரு நகைச்சுவை என எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவர் தனக்கு உருவாக்கிக்கொண்ட பிம்பம் அப்படிப்பட்டது. சினிமாக்களில் செந்திலை பார்த்து இப்படி நிஜ உலகில் கவுண்டமணி போன்ற ஒருவர் இருந்தால் கூட செந்தில் போல ஒருவர் இருக்க முடியுமா? என்று தானே எண்ணி இருந்தோம். இதோ, நிஜ உலகில் ஒருவர், தன் மேல் எந்த ஒரு அறிவு ஜீவி பிம்பத்தையும் தரிக்காமல், சிரிப்பு முலாம் பூசிக்கொண்டு நிற்கிறார். இவர் விதூஷகர் கூட இல்லை. ஆனாலும், எல்லோருக்கும் இவரை பிடிக்கிறது. சர்கஸில் கோமாளியை ரசிப்பது போல, எள்ளல் செய்தாவது பவர் ஸ்டாரை ரசிக்கிறோம்.

   நம்மை பொறுத்த வரை பவர் ஸ்டாரை ஓட்டியது, கலாய்த்தது எல்லாமே " நமக்கு ஒரு அடிம சிக்கீட்டாண்டா" பாணியில் செய்யப்பட்டவை. ஆனால், அவரோ அலட்சியமாக சற்றும் பொறுமை குறையாமல் ( நம்ம கோட்டு கோபி விடாப்புடியா ட்ரை பண்ணியும் கூட) இப்போது நினைத்ததை முடித்து விட்டார். இப்போது ஷங்கரின் "ஐ"யில் முக்கிய கதாப்பாத்திரம் பவர் ஸ்டார். அவர் இன்னமும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார் (இதே திறமையோடு எதையும் வளர்த்துக்கொள்ளாமலிருந்தால்). ஆனால், அவர் கற்றுக்கொடுத்த பாடம் முக்கியமானது.

"என்ன நீ கிறுக்கன்னு நெனச்சு கலாய்ச்ச, நான் உன்ன லூசு ஆக்கி பாசு ஆகி போயிட்டே இருக்கேன்"


 


No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..